' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

ஒரு நிமிடம் : ஒரு குறள்

Thursday, December 20, 2012

திரு.ஜெகதீசன் பிள்ளை - கோடரங்குளம் தெய்வத்திரு இராமலிங்கம் பிள்ளை ஆகியோரது பேத்தியும், கோவை திரு ஜெ.அருணாசலம் - திருமதி லதா அருணாசலம் ஆகியோரது மகள்கள் செல்வி அ. பிரபாலட்சுமி, அ. ஜெயந்தி இருவரும் கோவை இராமநாதபுரம் ஸ்ரீசத்ய சாயி சேவா சமிதி சார்பில் ஸ்ரீசாய் பாபா பிறந்தநாள் விழாவில் நடனமாடி பரிசுகள் பெற்றார்கள் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

எம்.ஆர்,திருவடி

பொது செயலாளர்
ஒ.ப.சீ. சங்கம், கோவை

Monday, December 10, 2012

கோவை ஓ.ப.சீ. வெள்ளாளர் சங்கம்

பொது நல சேமநிதி மற்றும் ஓ.ப.சீ. வெள்ளாளர் சங்கம், கோவை

291வது பொது நல சேமநிதி மற்றும் ஓ.ப.சீ. வெள்ளாளர் சங்க கூட்டம் 02/12/2012 ஞாயிறு காலை 11 மணிக்கு தலைவர் பா.கல்யாணசுந்தரம் இல்லத்தில் நடைபெற்றது.

இறை வணக்கம் செல்வன் சுபாஷ், செல்வி பூஜா, செல்வி அமிர்தா மற்றும் உதவி தலைவர் திரு எஸ்.ஈஸ்வரன் அவர்களால் பாடப்பட்டது.

மறைந்த நம் உறவினர்களுக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டது,

தலைவர் பா.கல்யாணசுந்தரம் அவர்கள், வந்திருந்த உறுப்பினர்களை வர்வேற்றும், செயலாளரிடம் அவரது வீட்டில் வைத்து, தனது தந்தை தெய்வத்திரு பிள்ளைபெருமாள் பிள்ளை அவர்களின் பெயரில் அவரது மகன் திரு.பி.பாபநாசம் அவர்கள் கோவை சங்கத்தின் கல்வி நிதிக்காக ருபாய் பத்தாயிரம் கொடுத்ததிற்கும்,
மேனாள் பொருளாளர் தெய்வத்திரு சங்கரமூர்த்தியா பிள்ளையின் வேண்டுகோளுக்கு இணங்க, தங்கள் முன்னோரின் நினைவாக கல்வி டிரஸ்டு ஆரம்பிக்க பிள்ளையார் சுழி போட்ட திரு லிபியா இராமானுஜம் அவர்களுக்கும், வைப்புத் தொகை வைத்துள்ளவர்களுக்கும் தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார். மேலும் இவ்வைப்பு தொகையானது ரூபாய் இரண்டு லடசத்து ஐம்பதாயிரம் அளவிற்கு வளர்ந்த்தை கண்டு தாம் மிக்க மகிழ்ச்சியடைவதாக கூறினார்.

சென்ற மாத அறிக்கை மற்றும் வரவு-செலவு கணக்கு விபரங்கள் செயலாளரால் கூட்டத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டது, அறிக்கையும், வரவு-செலவு கணக்கு விபரங்கள் உறுப்பினர்களால் ஏகமனதாக கரகோஷத்துடன் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள்:

1. நம்மவர்களின் குழ்ந்தைகளுக்கு கல்வி உதவி தொகை அளித்தல்

2. மருத்துவ உதவி நாடி வருபவர்களுக்கு ரூபாய் ஆயிரமும், மேலும் தேவைப்பட்டால் உறவினர்களிடம் வசூல் செய்து அளிப்பது

3. நன்மை, தின்மைகளுக்கு ரூபாய் ஆயிரம் அளித்தல்

4. முன்னால் உதவி.தலைவர் தெய்வத்திரு பிள்ளைபெருமாள் பிள்ளை அவர்கள் பெயரில் கல்வி டிரஸ்டு ஏற்படுத்தி அதற்கு ரூபாய் பத்தாயிரம் அளித்த திரு.பாபநாசம் என்ற பாபுவிற்கு நன்றி தெரிவித்தல்

5. தெய்வத்திரு வேலாயுதம் பெயரில் கல்வி டிரஸ்டு ஏற்படுத்தி கொடுத்த திருமதி ஜெயந்தி வேலாயுதம் மற்றும் அவர்தம் மகன் திரு வே.கள்ளபிரானுக்கும் நன்றி தெரிவித்தல்

6. எக்காரணத்தை முன்னிட்டும் கடன் வழங்கபட மாட்டாது;

7. கோவை கல்வி டிரஸ்டின் பெயரில் ரூபாய் ஏழாயிரம் கணக்கு ஏற்படுத்துதல்

8. கோவை சங்க சேமிப்பு கணக்கில் குறைந்தது ரூபாய் பத்தாயிரம் இருத்தல் வேண்டும்

9. திருமதி மீனாட்சி சண்முகம் மற்றும் அவர்தம் கணவர் திரு பி.சண்முகம் அவர்களால் திரு.வி.அருணகிரி வாங்கியுள்ள கடனை திருப்பி செலுத்தியமைக்கு நன்றி தெரிவித்தல்

மேற்கண்ட தீர்மானங்களும் உறுப்பினர்களால் கரகோஷ்த்துடன் ஏகமனதாக ஏற்றுகொள்ளப்பட்டது.

வந்திருந்த உறுப்பினர்கள் பெயர்களை குலுக்கி போட்டதில் திரு உ.மீனாட்சிசுந்தரம், திரு.தோ. சாத்தூரப்பன் அவர்களுக்கும் தலா ஒரு டம்பளர் பரிசாக கொடுக்கப் பட்டது,

தனது மணி விழாவினை எஸ்.என்,அரங்கத்தில் கொண்டாடிய கோவை சங்கத்தின் உதவி தலைவர் திரு ச.ஈஸ்வரனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு அவருக்கு சங்கதின் சார்பில் பொன்னாடை போர்த்தப்பட்டது..

உதவி செயலாளர் திரு கோ. சங்கரலிங்கம் வந்திருந்த எல்லா உறுப்பினர்களுக்கும், இட உதவி மற்றும் அறுசுவை உணவினை வழங்கிய தலவர் பா.கல்யாணசுந்தரம், திருமதி கோமதி கல்யாணசுந்தரம் அவர்களுக்கும் நன்றி நவில, கூட்டம் இனிதே முடிந்தது.

P.Kalyanasundaram             

                                                   M,R.Thiruvadi
President, Kovai OPS                           
                                Gen. Secretary, Kovai OPS

Thursday, November 15, 2012

கல்வி அபிவிருத்தி சங்கத்தின் 111-ம் ஆண்டு விழா

2
ஸ்ரீ 
திருநெல்வேலி ஒ.ப.சீ  வேளாளர் கல்வி அபிவிருத்தி  சங்கம் ,
திருநெல்வேலி-1.
அன்புடையீர்,
              வணக்கம், நமது ஒ.ப.சீ  வேளாளர் கல்வி அபிவிருத்தி  சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் கடந்த 2012 செப்டெம்பர் 16-ம் தேதி சிறப்பாக நடைபெற்றது. அவ்வமையம் , பொதுக்குழுவில் நமது ஒ.ப.சீ  வேளாளர் கல்வி அபிவிருத்தி  சங்கத்தின் 111-ம்  ஆண்டு விழாவை மாநில மாநாடாக வருகின்ற 2012 டிசம்பர் 30-ம் தேதி (30-12-2012) ஞாயிற்றுகிழமை அன்று விக்கிரமசிங்கபுரம் - A.V.S.R. திருமண மண்டபத்தில் வைத்து சீரோடும் சிறப்போடும் நடத்திட ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ள அவ்விழாவிற்கு தாங்கள் குடும்ப சகிதம் வந்து சிறப்பிக்க அன்போடு வேண்டுகிறோம். 

              இவ்விழாவிற்கு சிறப்பாக விக்கிரமசிங்கபுரத்தில் நடத்திட, திரு.வே.பாலசுப்பிரமணியன் அவர்களை பொதுக்குழு நியமித்துள்ளது. 

              மேலும் விழாவினை நடத்துவதற்கு , கலந்து கொள்ளும் உறுப்பினர்கள் தல ரூ 200/- (ரூபாய் இரு நூறு மட்டும்) நன்கொடையாக திரு.வே.பாலசுப்பிரமணியன் , 41/21, சன்னதி தெரு , விக்கிரமசிங்கபுரம் - 627 425 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க அன்போடு வேண்டுகிறோம். 

அவரது செல் நம்பர் : 98429 29646.

             கலந்து கொள்ளும் அன்பர்கள் தங்களது வருகையை பற்றி முன்னதாகவே தகவல்களை திரு. வே. பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு தெரிவிக்க அன்போடு வேண்டுகிறோம்.

                            நன்றி, வணக்கம்.

                                                    தங்களன்புள்ள,

                                                     திரு ச.இராமனுஜம் தலைவர்,
                                             திரு. இரா.செந்தூர் நாதன், செயலாளர்,
                                            திரு. தி.செல்லையா, பொருளாளர் 
             ஒ.ப.சீ  வேளாளர் கல்வி அபிவிருத்தி  சங்கம் ,
                                                திருநெல்வேலி-1.
கோவை பொதுநல சேம நிதி மற்றும் ஒ.பி.எஸ். வெள்ளாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம் 12/08/2012 மாலை 4 மணி அளவில் உதவி செயலர் திரு ஜி.சங்கரலிங்கம் அவர்கள் அலவலுகத்தில் நடைபெற்றது.

இறைவணக்கம் செல்வன் எ.ராகவேந்திர குமாரால் பாடப்பட்டது. சங்க தலைவர் திரு.பா.கல்யாணசுந்தரம் தமது உரையில், சென்னையில் திரு அனந்த பத்மனாபன் இல்லதில் கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றபோது திரு அனந்த கண்ணபிரான் அவர்கள் "சண்முகம்-கீதா பொது அறக்கட்டளை"யின் கல்வி உதவி தொகை விண்ணப்பங்கள் திரு எம்.ஆர்.திருவடி அவர்களிடம் அளித்து அதனை கோவையில் கல்லூரியில் படிக்கும் நம் இன மாணவர்களுக்கு விநியோகம் செய்யுமாறு கூறியதை எடுத்துக் காட்டினார். அதன்படி கோவையில் விநியோகம் செய்ததில், நம் மாணவ்/மாண்வியர் 4 பேருக்கு தலா ரூபாய் ஐயாயிரம் வீதம் அவரவர் பெயரில் "சண்முகம்-கீதா பொது அறக்கட்டளை" மூலம் ரூபாய் இருபதாயிரம் காசேலைகளாக பெற்று அதனை (1) அ.ராகவேந்திர குமார் த/பெ திரு கே.அப்பாசாமி (2) ப்.மீனாட்சிசுந்தரம் த/பெ திரு ஜி.பட்சிராஜன் (3) ப்.பட்சியம்மாள் த/பெ திரு ஜி.பட்சிராஜன் (4) கு.ஸ்ரீராம் த்/பெ தெய்வத்திரு க.குமாரசாமி ஆகியோருக்கு வழங்கப் பட்டதையும் எடுத்துக் கூறினார். மேலும் கல்வி உதவி தொகை வாங்கிய மாணவ/மாணவியர்கள் முடிநதவரை தங்கள் பெயரில் குறைந்தபட்சம் ரூபாய் ஆயிரம் நிரந்தர வைப்பு நிதியில் சேமிக்கும்படியும் கேட்டுக் கொண்டார்

கல்வி உதவி தொகை நல்கிய "சண்முகம்-கீதா பொது அறக்கட்டளை" மற்றும் கோவை சங்கத்தின் சார்பிலும், தலவர் பா.கல்யாணசுந்தரம், பொருளாளர் திரு எம்.ஆர்.ஆழ்வாரப்பன், பொன் விழா குழு நிதி தலைவர் திரு டி.சாத்தூரப்பன் அவர்களும் சங்க்த்தின் சார்பில் நன்றியினை தெர்வித்துக் கொண்டார்கள். மேலும் "சண்முகம்-கீதா பொது அற்க்கட்டளை" கல்வி உதவித் தொகை விண்ணப்பம் பெற சிறந்த முறையில் உதவி நல்கிய செய்தி மலர் முதன்மை ஆசிரியர் திரு அனந்த கண்ணபிரான் அவர்களுக்கும் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

பொருளாளர் திரு எம்.ஆர்.ஆழ்வாரப்பன் தனது உரையின்போது, வரும் எதிர்காலங்களில் மாணவ/மாணவியர் தாங்கள் பணிக்கு சென்ற பிறகு நமது சங்கத்திற்கு தங்களால் முடிந்த அள்வு பண உதவி அளித்தால் மிக் சிறப்பாக இருக்கும் என எடுத்துரைத்தார்.

இறுதியாக, கூட்டம் நடத்த இடம் தந்த உதவி செயாளர் திரு.ஜி.சங்கரலிங்கத்திற்கும், கூட்டம் சிறப்பாக நடைபெற பெரிதும் உதவிய திரு.ஜி.பட்சிராஜனுக்கும் நன்றி கூறப்பட்டது.

P.Kalyanasundaram             
                                             M.R.Thiruvadi
President                     
                                                     Gen. Secretary
------------------------------
-----------------------------------------------------------------------------------------------
Regards
M.R.S.
m.ramasubramanian
ramasubramanian subramanian mrs_subramanian@yahoo.co.in
27 Aug

to Kannabiran, me, Gomathi, M.R.Thiruvadi
15.08.2012 அன்று வி.கே.புரத்தில் நடைபெற்ற கூட்டமைப்பு செயற்குழு கூட்டத்தில் கோவை சங்கத்திற்கு இரு மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை ரூபாய் எட்டாயிரம் வழங்கிய கூட்டமைப்பிற்கு கோவை சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.பயன்பெற்ற மாணவர்கள் பின்வருமாறு: (1) கு.ஸ்ரீராம் த/பெ தெய்வத்திரு க.குமாரசாமி (2) சொ.ஆழ்வார் த/பெ திரு.க.சொக்கலிங்கம்

15.08.2012 அன்று விக்கிரம சிங்கபுரத்தில் சிறப்பாக நடைபெற்ற வி.கே.புரம் மாதர் சங்கத்தின் 12வது ஆண்டு விழாவில் கோவை சங்கத்தின் சார்பில் நமது செயலாளர் திரு எம்.ஆர்.திருவடி அவர்களும், செயற்குழு உறுப்பினர் திரு டி.சாத்தூரப்பன் அவர்களும் கலந்து கொண்டார்கள். மாதர் சங்க கூட்டத்திற்கு வந்திருந்த சிறப்பு அழைப்பாளர்களுக்கு நினைவு ப்ரிசினை வழ்ங்கி விழாவினை மிக சிறப்பாக நடத்தின மாதர் சங்க நிர்வாகிகளுக்கு சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப் பட்டது. மேலும் வி.கே.புரம் மாதர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கு கோவை சங்கம் தனது பாராட்டுதல்களை தெரிவித்து கொண்டது.

P.Kalyanasundaram, President and       
M.R.Thiruvadi, Gen. Secretary

Sunday, August 26, 2012

கோவை சங்க செய்திகள்

கோவை ஒ.பி.எஸ். சங்க செயலாளர் எம்.ஆர்.திருவடி அவர்கள் கோவை சங்கத்தின் சார்பாக கல்வி உதவித் தொகை கேட்டு வைத்த கோரிக்கைக்கு, சென்னை வாழ் இஞ்சினியர் திரு. சண்முகம் தான் நிறுவியுள்ள சண்முகம்-கீதா பப்ளிக் சாரிட்டபிள் டிரஸ்டு மூலமாக கீழ்கண்ட நான்கு மாணவ/மாணவியர்க்கு தலா ஐந்தாயிரம் வீதம் மொத்தம் ரூபாய் இருபதாயிரம் கல்வி உதவித் தொகையாக வழ்ங்கியுள்ளார்கள் என்பதனை தெரிவித்துக் கொள்ளுகிறோம். கல்வி உதவித் தொகை அளித்த திரு சண்முகத்திற்கு சங்கத்தின் சார்பில் நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம். கல்வி உதவித் தொகை பெற்றவர்கள் பின்வருமாறு:

1) கு.ஸ்ரீராம் த/பெ தெய்வத்திரு ஜி.குமாரசாமி --  பி.காம் (சி.ஏ.)

2) ப.மீனாட்சிசுந்தரம் த/பெ ஜி.பட்சிராஜன்        --  டி.எம்.ஈ (சாண்டுவிச்)
3) ப.பட்சியம்மாள் த/பெ ஜி.பட்சிராஜன்             --  பி,காம்
4) அ.ராகவேந்திரகுமார் த/பெ கே.அப்பாசாமி   --  எம்.சி.ஏ.

அன்புடன்,

எம்.ஆர்.திருவடி
செயலாளர்
ஒ.பி.எஸ்., கோவை

Wednesday, August 8, 2012

Information:
Indian Banks’ Association (IBA) had revised the Educational Loan Scheme
recently, (Circular No: CE/210 dated 31.05.2012) in consultation with major
educational Institutions in India- The Details  can be seen at http://www.iba.org.in/
educational_loan.asp
By Shri Rajkumar,Mumbai
OPS வெள்ளாளர் சங்கம்,  கோவில்பட்டி 
பொதுக்குழு கூட்ட அழைப்பு 

நமது சங்க பொதுக்குழுக் கூட்டம் 12.08.2012 ஞாயிறு அன்று மாலை 5.00 மணிக்கு கோவில்பட்டி சைவ வேளாளர் சங்க கட்டிடத்தில் வைத்து நடைபெற உள்ளது. உறுப்பினர்கள் தவறாது குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டுகிறோம். 

M.தெய்வநாயகம்    C.ரெங்கநாதன்                   D.தேவர்பிரான் 
    செயலாளர்             பொருளாளர்                               தலைவர் 
O.P.S வெள்ளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு, சென்னை 
(Federation of OPS Vellalar Sangams)

கூட்டமைப்பின்  பொதுக்குழுக் கூட்டம் 15.08.2012 புதன் அன்று காலை 11 மணிக்கு , வி .கே புரம் , AVR கல்யாண மண்டபத்தில் நடைபெறும் என கூட்டமைப்பு தலைவர் திரு அழகிய நம்பி அவர்களும், செயலாளர் திரு ஞானதேசிகன் அவர்களும் தெரியபடுத்தி உள்ளார்கள் 

பொது நல சேமநிதி மற்றும் ஒ.பி.எஸ். வெள்ளாளர் சங்கம், கோயம்புத்தூர்



22/07/2012 ஞாயிறு காலை 10.30 மணிக்கு ஹோட்டல் ஆர்.எச்.ஆர்.ல் பொதுக்குழு கூட்டம் நடைப்பெற்றது. இறை வணக்கம் திரு எம்.சுப்பிரமணியன் மகள் பூஜா, மகன் சுபாஷ் இருவரும் பாடினார்கள். மேலும் உப தலைவர் திரு எஸ்.ஈஸ்வரன் அவர்கள் பக்தி பாடல் பாடி எல்லோரையும் பரவசப்படுத்தினார்.


தெய்வத்திரு கணபதி சுப்பிரமணியன் மூத்த மகன் ஜி.குமாரசாமி அவர்களின் மறைவிற்கு இரண்டு நிமிடம் மெளனம் அனுஷ்டிக்கப்பட்டது.


திரு.எஸ்.எஸ்.மணி அவர்கள் வந்திருந்த உறுப்பினர்களை வரவேற்பு உரை நிகழ்த்தினார்.


தலைவர் திரு பா.கல்யாணசுந்தரம் அவர்கள் தனது உரையில், கல்வி நன்கொடையாக ரூபாய் பதினைந்தாயிரம் திரு எஸ்.ஈஸ்வரன், திரு டி.சாத்துரப்பன் மற்றும் திரு எம்.ஆர்.திருவடி அவர்களால் உறுப்பினர்களிடமிருந்து பெற்றமைக்கு நன்றி தெரிவித்தார். மேலும் அதற்காக கார் வாடகை, பெட்ரோல், டிரைவர் பேட்டா செலவழித்த திரு.எஸ்.ஈஸ்வரன் மற்றும் திரு.டி.சாத்துரப்பன் அவர்களுக்கும் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.


மேலும் கூட்டத்தில் திரு.எம்.ஆர்.திருவடி அவர்கள் நெல்லை கல்வி அபிவிருத்தி சங்கத்திற்கு ஆயுள் சந்தாவும், ஒ.பி.எஸ்.கூட்டமைப்பிற்கு சந்தா மற்றும் செய்தி மலர் சந்தா வசூலித்து அனுப்பியமைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.


நம் இன மாணவ்/மாணவியர்களுக்கு கல்வி உதவி தொகை நல்கிய டி.ஏ.பி. டிரஸ்டிற்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் தெய்வத்திரு சங்கரமூர்த்தி-தெய்வத்திருமதி கோதை அம்மாள் அவர்களின் பேரனும், திரு ச.சுப்பிரமணியன்-திருமதி சு.அழகம்மாள் அவர்களின் மகன் திரு சு.சங்கர் அவர்கள் தமிழக ஆளுநர் திரு ரோசையா அவர்களிடமிருந்து டாக்டர் (பி.எச்டி) பட்டம் பெற்றமைக்கு கூட்டத்தில் பாராட்டும், வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.


சென்ற மாத அறிக்கை உதவி செயலாளர் திரு.ஜி.சங்கரலிங்கம் அவர்களாலும், வரவு செலவு அறிக்கை பொது செயலாளர் திரு எம்.ஆர்.திருவடி அவர்களாலும் வாசிக்கப்பட்டு, அனைத்தும் உறுப்பினர்களால் கரகோஷத்துடன் ஏற்றுக்கொள்ளப் பட்டது.


ஈஷா யோக மையத்தில் வசிக்கும் நம் உறவினர் திரு.சொ.ச. சுவாமி அவர்கள் தனது உரையில், தனது தந்தையார் காலத்திலிருந்து மிகச் சிறப்பாக நடைபெறுவதாகவும், இதன் உப தலைவராக இருந்தமையையும் நினைவு கூர்ந்தார். மேலும் ஒற்றுமையுடனும், அன்புடனும் உறுப்பினர்கள் இருப்பதால்தான் நாம் முன்னுக்கு வர முடிந்துள்ளதையும், இரு சங்கங்களும் நல்ல முறையில் செயல்படுதையும் குறிப்பிட்டு அதனை கண்டு தான் பூரிப்பும், மகிழ்ச்சியும் அடைவதாக குறிப்பிட்டார். மேலும் இக்கூட்டத்தில் பேச வாய்ப்பளித்தமைக்கு நிர்வாகிகளுக்கு தனது நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொண்டார்.


கோவை சங்க கெளரவ ஆலோசகர் திரு எஸ்.வெங்கட்ராமன் சங்கமானது கட்டுக்கோப்புடனும், அமைதியாகவும் நடைப்பெறுவதை பாராட்டி பேசினார்.


திரு திரவியம் ராஜப்பா அவர்களின் மருமகன் திரு.ஆர்.சுப்பிரமணியன் அவர்கள் தனது உரையில், மற்ற சங்கங்களைப் போல் இன உணர்வோடு முடிநத வரையில் நிதி உதவி வழங்க வேண்டும் என்றும், சங்கம் தங்களுக்கு என்ன செய்தது என்று பார்ப்பதை விட நாம் சங்கத்திற்கு எப்படி உதவிட முடியும் என்று எண்ணிப் பார்க்க வேண்டும் என்றும், அப்ப்டி செய்தால் நம் இன மக்கள் எல்லோரும் வளர்ச்சி காண இயலும் என்று கூறினார். மேலும் அவர் தனது உஅரையில், கல்வி உதவி தொகை பெறுபவர்கள் தாங்கள் நல்ல நிலைக்கு வந்தப்பின் அவ்வாறே தாங்களும் தங்களால் இயன்ற கல்வி உதவி தொகை சங்கத்திற்கு அளித்து தங்களது ஆதரவினை தொடர வேண்டும் என்று வலியுறுத்தினார்.


கோவை சங்க கல்வி குழு தலைவர் பேராசிரியர் திரு இ.வள்ளிநாயகம் தனது உரையில், நம் உறவின மாணவர்கள் எவரேனும் தங்களது ஏழ்மை காரணமாக கற்க இயலாமல் போவதை தடுக்கும் பொருட்டு அவர்களுக்கு கல்லூரி படிப்பு செலவுகளை நம் உறவினர்கள் முடிந்தவரை ஏற்று கொண்டால் மிக நன்றாக இருக்கும் என்பதை வலியுறுத்தி பேசினார்.


நம் இன மாணவ/மாணவியர்களுக்கு டி.ஏ.பி. டிரஸ்டு அளித்த கல்வித் தொகையான ரூபாய் இருபத்தைந்தாயிரத்து நானுற்று ஐம்பது (25,450), பொது நல சேம ந்தி அளித்த ரூபாய் பதினைந்தாயிரத்து என்னூறு (15,800) ஆக மொத்தம் ரூபாய் நாற்பத்து ஒன்றாயிரத்து இருநூற்று ஐம்பது (41,250) இக்கூட்டத்தின் வாயிலாக வழங்கப்பட்டது.


பத்தாம் வகுப்பில் முதல் மாணவியாக வந்த திரு.ஏ.சீனிவாசனின் புதல்வி செல்வி சீ.லட்சுமி நவீனாற்கு ரூபாய் முன்னூறும் (300), இரண்டாவதாக வந்த திரு ஜி.சொக்கலிங்கத்தின் மகன் சொ.ராம்குமாருக்கு ரூபாய் இருநூற்று ஐம்பது (250) மற்றும் மூன்றாவதாக வந்த திரு எம்.சுப்பிரமணியன் புதல்வன் எஸ்.எம்.எஸ். சுபாஷ்க்கு ருபாய் இருநூறும் (200) கல்வி ஊக்க தொகையாக வழங்கப்பட்டது.


+2 வகுப்பில் முதல் மாணவனாக வந்த தெய்வத்திரு ஜி.குமாரசாமியின் புதல்வன் கு.ராம்குமார் அவர்களுக்கு ருபாய் முந்நூறு (300) கல்வி ஊக்க தொகை வழங்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற 25 வயதிற்கு கீழ்பட்டவர்களுக்கான சதுரங்கப் போட்டியில் முதல் பரிசினை பெற்ற திரு.எஸ்.கணபதி@ குகனின் புதல்வர் க.மணிபாரதிக்கு சங்கத்தின் சார்பில் ஒரு சிறு பரிசு அளிக்கப்பட்டது.


மேலும் கோவை சங்கத்தில் திரு.வே.கள்ளபிரான் அவர்கள் தனது தந்தை நினைவாக தெய்வத்திரு க.வேலாயுதம் அவர்களின் பெயரில் கல்வி அறக்கட்டளையாக ரூபாய் ஐந்தாயிரம் (5,000) அளித்தார். அதனை சங்க உறுப்பினர்கள் தங்களது மகிழ்ச்சினை கரகோஷ்த்தின் மூலம் வெளிப்படுத்தினர்.


உறுப்பினரின் ஈமச்சடங்கிற்கு ரூபாய் ஆயிரம் (1,000) அளித்ததை சங்க உறுப்பினர்கள் ஏகமனதாக ஏற்று கொண்டார்கள்.


கூட்டத்திற்கு வந்திருநத மாணவ/மாணவியர்களில் குலுக்கல் மூலம் தேர்ந்து எடுக்கப்பட்ட, எஸ்.எஸ்.சுபாஷ், எஸ்.மணிபாரதி மற்றும் ஸ்ரீரங்கனாதன் ஆகிய மூவருக்கும் பொது அறிவு புத்தகம் தலைவர் திரு பா.கல்யாணசுந்தரம் தனது சார்பில் வழங்கினார்.


கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் பெயர்களை குலுக்கிப் போட்டதில் தேர்வு செய்யப்பட்ட திரு. உ.மீனாட்சிசுந்தரம் மற்றும் திரு எம்.சொக்கலிங்கம் ஆகிய இருவருக்கும் சங்கத்தின் சார்பாக எவர்சிலர் டிபன் பாக்ஸ் பரிசாக அளிக்கப்பட்டது.


இறுதியாக, உதவி செயலாளர் திரு ஜி.சங்கரலிங்கம் தனது உரையின்போது, கல்வி உதவி தொகை அளித்திட்ட டி.ஏ.பி, டிரஸ்டிற்கும், கல்வி உதவி நல்கிய நம் இன பெருமக்களுக்கும், கலந்து கொண்ட உறவினர்களுக்கும், இடம் மற்றும் மதிய உணவு வழங்கிய திருமதி ஸ்ரீரங்கநாயகி அம்மாள், திரு எஸ்.எஸ்.மணி, திருமதி ஆணந்த கிருஷ்ணவேணி மணி, செல்வன் ஸ்ரீரங்கந்தாதன் மற்றும் செல்வி மகாலட்சுமிக்கும் நன்றி தெரிவித்தார்.

Regards
M.R.Thiruvadi
Gen Sec. Kovai OPS Sangam
==============================
==============================
==============================
======================================
Informed by
M.R.S.,Kovai

Friday, June 29, 2012

சதுரங்க போட்டி

கோவை திரு கணபதி அவர்களின் புதல்வன் செல்வன் மணி பாரதி சதுரங்க போட்டியில்பங்கேற்று வெற்றி பெற்ற போது எடுக்கப்பட்ட படங்களை திரு கணபதி அனுப்பியுள்ளார். 




MANI BHARATHY"S NEWS IN DINAMALAR PUBLISHED ON 21-06-2012


மணி பாரதிக்கு வாழ்த்துக்கள்.

Thursday, June 21, 2012

கோவை பொதுநல சேம நிதி மற்றும் ஒ.பி.எஸ். சங்க கூட்டம்

கோவை பொதுநல சேம நிதி மற்றும் ஒ.பி.எஸ். சங்க கூட்டம் திருமதி கே.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் இல்லத்தில் 17.06.2012 அன்று ஞாயிறு காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.

முதலில் இறைவணக்கம் திரு.எஸ்.எஸ். மணி அவர்களின் மகன் செல்வன் இரங்கநாதன், மகள் செல்வி மகாலட்சுமி மற்றும் உபதலைவர் திரு எஸ்.ஈஸ்வரன் அவர்களாலும் பாடப் பெற்றது,


தலைவர் திரு பி.கல்யாணசுந்தரம் தனது வரவேற்பு உரையில், சிரமம் பாராது பாடுபட்டு கல்வி அறக்கட்டளை நிறுவ உதவிய பொது செயலாளர் திரு எம்.ஆர்.திருவடி அவர்களுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துக் கொண்டார். மேலும் (1) ஈஷா யோக மையம் திரு சி.எஸ்.சாமி-திருமதி கீதா சாமி அவர்கள் தெய்வத்திரு சொக்கலிங்கம் பிள்ளை-தெய்வத்திருமதி அலமேலு அம்மாள் பெயரிலும் (2) திரு திரவியன் ராஜப்பா அவர்களின் மருமகன் திரு ஆர்.சுப்பிரமணியன் அவர்கள் தனது துணைவியார் நினைவாக தெய்வத்திருமதி லதா அவர்களின் பெயரிலும் கல்வி அறக்கட்டளை நிறுவியதற்கு சங்கத்தில் பாராட்டும் நன்றியும் தெரிவித்துக் கொள்ளப்பட்டது,


காலம் சென்ற (1) திரு என்.சண்முகசுநதரம் புதல்வர் விகாஸ் நாராயாணன் (2) திரு எஸ்.எஸ்.மணியின் அத்தை திருமதி சிங்கிகுளம் ஆழ்வார் அம்மாள் (3) திரு கே.லெட்சுமணன அவர்களின் சித்தப்பா திரு லெட்சுமிநாராயணன் ஆகியோர்களுக்கு 2 ந்மிடம் மவுன அஞ்சலி செலுத்தப் பட்டது.


சென்ற மாத கூட்டறிக்கை செயலாளராலும், வரவு செலவு கணக்கு பொருளாளர் திரு எம்.ஆர்.ஆழ்வாரப்பன் அவர்களாலும் வாசிக்கப்பட்டு, அது கரகோஷத்துடன் ஏகமனதாக ஏற்றுகொள்ளப்பட்டது.


2011ல் பொதுநல சேமநிதியின் பொன்விழாவும், ஒ.பி.எஸ்.சங்கவிழாவின் நினைவாக இன்றைய கூட்டத்திற்கு வந்திருந்த உறுப்பினர்களுக்கு "டிராவல் பேக்" கொடுக்கப்பட்டது,

பின்னர் கூட்டத்தில் உடுமலை ஒ.பி.எஸ். தலைவர் திரு.பட்சிராஜன், தெய்வத்திரு இராமலிங்கம் பிள்ளையின் மாப்பிள்ளை திரு அருணாசலம் அவர்களும் சிறப்பு உரை ஆற்றினார்கள். மேலும் டாக்டர் வள்ளிநாயகம் அவர்கள் தனது உரையில் இரு சங்கங்களின் செயல்பாட்டை பாராட்டியதுடன், கோவையில் படிக்கும் மாணவ், மாணவிகளுக்காக ஒரு தனியாக கல்வி உதவி குழு அமைக்கலாம் என்றும் ஆலோசனை கூறினார்.


கூட்டத்தில் மேனாள் உதவி தலைவர் திரு. சாம்பசதாசிவம் பிள்ளை அவர்கள், இரு சங்ககளும் திறமையாகவும், சிறப்பாகவும் செயல்படுவதை பாராட்டி பேசினார்கள். அது போன்றே திரு தோ..சாத்தூரப்பன் அவர்களும் சங்கத்தின் செயல்பாடுகாளை பாராட்டி பேசினார்கள்.


கோவையில் புதிதாக அமைக்கபட உள்ள கல்வி குழுவிற்கு கீழ்கண்டவர்கள் உறுப்பினர்களாக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

(1) டாக்டர் ஈ வள்ளிநாயகம் (2) திரு எஸ்.வெங்கட்ராமன் (3) திரு எஸ்.எஸ்.மணி (4) திரு ஜி.சங்கரலிங்கம் (5) திரு தோ.சாத்தூரப்பன் (6) திரு.எம்.ஆர்.திருவடி (7) திரு.எம்.இராமசுப்பிரமணியன்

திரு இரா.ஸ்ரீதரன் புதல்வன் திரு எஸ்.சரவணன் அவர்கள் இளங்களை கணிப்பொறி மற்றும் 3டி அனிமேஷன் கல்வி பயின்று தற்போது கோவையில் "ஆர்த்தோ 1" என்னும் மருத்துவமனையில் வரவேற்பாளராக பணியில் சேர்ந்தமைக்கும், காரமடை திரு என்.கிருஷ்ணன் புதல்வி செல்வி கி.அருள்செல்வி ஆசிரியர் பயிற்சியில் தேர்வு பெற்றமைக்கும் சங்கம் தனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறது.


கூட்டத்திற்கு வந்த உறுப்பினர்கள் பெயர்களை குலுக்கி போட்டதில் அதில் வந்த தேர்வு பெற்ற (1) திரு எஸ்.எஸ்.மணி அவர்களின் துணவி திருமதி கிருஷ்ணவேணி (2) திருமதி சூடாமணி இராமசுப்பிரமணியன் ஆகிய இரு அதிர்ஷடசாலிகளுக்கு தலா ஒரு எவர்சில்வர் டம்ளர் பரிசாக அளிக்கப்பட்டது.


அடுத்த கூட்டம் திரு எஸ்.எஸ். மணி அவர்கள் இல்லத்தில் 22.07.2012 ஞாயிறு காலை 10.30 மணி அளவில் நடத்துவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


இறுதியாக உதவி செயலாளர் திரு ஜி.சங்கரலிங்கம் அவர்கள் கூட்டத்திறகு வந்திருநத உறுப்பினர்களுக்கும், கூட்டத்தின் முடிவில் இடம் அளித்து சிறப்பான மதிய உணவு அளித்து கூட்டம் சிறப்புற நடைபெற உதவிய திருமதி எஸ்.கே.சுப்புலட்சுமி, திரு அருனாசலம் மற்றும் திருமதி லதா அருனாசலம் ஆகியோருக்கும் தனது நன்றியினை தெரிவிக்க, கூட்டம் இனிதே முடிவு பெற்றது.

Regards
M.R.S.
m.ramasubramanian

Saturday, May 26, 2012

Loan for Engg Students

This information was given by the Minister of State for Finance, Shri Namo Narain Meena in written reply to a question in Rajya Sabha today.(22, May 2012)
Education Loans for Engineering Students
The Indian Banks’ Association (IBA) had circulated a Model Educational Loan Scheme for implementation to its member banks with broad operational guidelines. Banks may adopt the scheme with discretion to make changes as deemed fit.
The scheme is for all Indian Nationals who have secured admission to professional/technical courses in India or abroad through an entrance test/merit based selection process.
As per the scheme, the assessment of the educational loan is based on the employability and earning potential of the student upon completion of the course.
This information was given by the Minister of State for Finance, Shri Namo Narain Meena in written reply to a question in Rajya Sabha today.
 Info by Mumbai shri Rajkumar

Monday, May 14, 2012

Any one from OPS?


Highlight of Civil Services Exam, 2011 Results

1              4,72,290 candidates applied;  2,43,003 candidates have actually appeared.
2          11984 candidates were declared qualified for the Main written,  in Oct-Nov, 2011.
3       Out of  which 2417 candidates selected for the Personality Test in March-April, 2012
4          Finally, 910 candidates (715 male & 195 female) have been recommended  to the IAS,    IFS, IPS and other Central Services against 1001 reported vacancies.
5.         The First two positions taken by female candidates. The top 25 candidates include 19     male (including 01 visually challenged candidate) and 06 female candidates. In the top          100 candidates, there are 21 female candidates.
6.         Ms. Shena Aggarwal topped the Examination. She has done MBBS from All India         Institute of Medical Sciences, Delhi. This is her 3rd attempt.
7.         2nd ranker is Ms. Rukmani Riar.  She has done M.A.(Social Entrepreneurship) from          Tata Institute of Social Sciences, Mumbai. This is her 1st attempt.
8.         The 3rd position is bagged by Shri Prince Dhawan. He has done M. Tech (Elect.Engg.) from IIT, Delhi. This is his 1st attempt.
9.         The top 25 candidates include alumni from the premier institutions, including AIIMS,       IIM and IITs. An alumnus of London School of Economics also figures in the top 25.
10        Family background of top 25 candidates show diverse representation include farmer,    teacher, businessman, army personnel, low and middle level govt. servants, doctors,      advocate, professor & civil servants.
11        Among top 25 candidates, 6 have made  to the merit lift in their 1st attempt; 07 in 2nd attempt; 09 in 3rd attempt; and 01 each in 4th, 5th & 6th attempts. As many as 12 have       already been recommended to services other than IAS on the basis of Civil Services           Examinations of previous years.

(Source PIB)
By Mumbai Rajkumar

Saturday, May 12, 2012

75வது பிறந்த நாள் விழா மற்றும் கல்வி அறக்கட்டளை நிறுவன விழா

75வது பிறந்த நாள் விழா மற்றும் கல்வி அறக்கட்டளை நிறுவன விழா 

வைப்பார் திருமதி வேலம்மாள் சுவாமிநாதன் தனது 75வது பிறந்த நாள் விழாவை 08.05.2012 செவ்வாய்கிழமை  அன்று வைப்பார் அருள்மிகு விசாலாச்சி அம்பாள் திருக்கோவிலில் வைத்து 
சிறப்பாக கொண்டாடினார்கள். அன்று திருநெல்வேலி ஒ.ப.சீ  வெள்ளாளர் கல்வி அபிவிருத்தி சங்கத்திற்கு தனது தந்தை திரு அய்யாசாமிபிள்ளை தாயார் திருமதி நல்லசெண்பகசுந்தரராஜ முனியம்மாள் 
ஞாபகார்த்தமாக ரூபாய் 50001/- ஐம்பதாயிரத்திஒன்று  செலுத்தி அறக்கட்டளை நிறுவினார்கள்.  அவர்களை பாராட்டி கல்வி அபிவிருத்தி சங்க தலைவர் திரு S.ராமானுஜம் அவர்கள் தலைமையில் பாராட்டுக் கூட்டம் திருமதி சரஸ்வதி 
பெரிய திருவடி அவர்கள் இறை வணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டு திருச்சி 
திரு முத்துராமன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். திருமதி வேலம்மாள் அவர்களைப் பாராட்டி கல்வி அபிவிருத்தி சங்க 
செயலாளர் திரு L.செந்தூர் நாதன் அவர்கள், நெல்லை திரு ஆழ்வாரப்ப  பிள்ளை, கோவில்பட்டி சங்கத் தலைவர் திரு தேவர்பிரான், திருச்சி சங்கத் தலைவர் திரு சடகோபன் , சென்னை திருமதி மேனகா சொக்கலிங்கம் , திருமதி சரசு பெரிய திருவடி , கோவில்பட்டி செண்பகசுந்தரம், திருவேங்கடம் V.A.O. சங்கரன் , நெல்லை பாஸ்கரன் ஆகியோர் பாராட்டி பேசினார்கள்.  

பாராட்டியவர்களுக்கு திருமதி வேலம்மாள் குடும்பத்தினர் பொன்னாடை போர்த்தி  கவுரப் படுத்தினார்கள். திருமதி வேலம்மாள் அவர்களுக்கு கல்வி அபிவிருத்தி 
சங்கத்தின் சார்பாக அருள்மிகு விக்ன விநாயகர் படமும் , கோவில்பட்டி சங்கத்தின் சார்பாக அஷ்டலஷ்மி படமும் நினைவுப் பரிசாக 
வழங்கப்பட்டது.   

பிறந்த நாள் விழா 

மதிய உணவிற்குப் பின் கேக் வெட்டி சிறப்பாக பிறந்த நாள் விழா கொண்டாடப் பட்டது.  
வருகை தந்த அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கினார்கள். 100 பேர் வரை கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். 
ராஜபாளையம் திரு சீனிவாசன் என்ற கண்ணன் நன்றியுரை வழங்க விழா 
இனிதே நிறைவுற்றது.

விழா ஏற்பாடு: மதுரை திரு D.அருணாசலம் , திரு D. விஸ்வநாதன் , திரு B.அய்யாசாமி, திரு B.முத்துராமன் குடும்பத்தினர் சிறப்பாக 
செய்திருந்தார்கள்.

 





   

Thursday, May 3, 2012

திருத்தம்

கீழ்கண்ட வரிகளில், கூட்டமைப்பு தலைவர் திரு எஸ்.அழகியநம்பி என்பதற்கு பதிலாக திரு.சண்முகசுந்தரம் என்று தவறுதலாக செய்தி அளித்துவிட்டேன்.. தவறுதலுக்கு மிக்க வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். எனவே தாங்கள் படிக்கும்போது கூட்டமைப்பு தலைவர் திரு எஸ்.அழகியநம்பி என்று திருத்தி வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

மருத்துவ உதவித் தொகை அளித்த திரு.ஜி.கோபால், ஒ.ப.சீ. செய்தி மலர் ஆசிரியர் திரு அனந்த கண்ணபிரான், கூட்டமைப்பு தலைவர் திரு எஸ்.சண்முக சுந்தரம், கூட்டமைப்பு செயலாளர் திரு.டி.ஞானதேசிகன் அவர்களுக்கு செயற்குழு கூட்டம் தனது உறுப்பினர்கள் சார்பாக மனமார்ந்த நன்றியையும், பாராட்டினையும் தெரிவித்துக் கொண்டது.

Regards
M.R.S.
m.ramasubramanian

Saturday, April 28, 2012

மழலைச் செல்வம்

சென்னை கொரட்டூர் திரு அழகிய சிங்கப்பெருமாள் - திருமதி தெய்வம்மாள் அவர்களின் மருமகளும் , திருநெல்வேலி திரு சுப்பிரமணியன்   - முத்தம்மாள் அவர்களின் மகளும் , திரு ராமானுஜ வாசன் (சவுதி) அவர்களின் மனைவியுமான திருமதி சிவசங்கரி க்கு 28.04.2012 காலை திருநெல்வேலியில் வைத்து ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

 

பூப்புனித நீராட்டு விழா

கோவை சங்கத் தலைவர் திரு கல்யாணசுந்தரம் , வடவள்ளி திரு மீனாட்சி சுந்தரம் ஆகியோரின் பேத்தியும் திரு சுப்ரமணியன் - பாப்பம்மாள் (எ) வெண்ணிலா அவர்களின் புதல்வியுமான செல்வி பூஜா வின் பூப்புனித நீராட்டு விழா 25.04.2012 அன்று , வடவள்ளி GCT நகரில் அமைந்திருக்கும் அவர்கள் இல்லத்தில் வைத்து நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டு செல்வி பூஜாவினை ஆசிர்வதித்து சிறப்பித்தார்கள். 

வாழ்த்துக்கள் : கோவில்பட்டி OPS சங்கம். 

கோவில்பட்டி சங்க சிறப்புக் கூட்டம்

கோவில்பட்டி சங்க சிறப்புக் கூட்டம் 22.04.2012 அன்று காலை 10.00 மணிக்கு சனக பொருளாளர் திரு ரெங்கநாதன் அவர்கள் இல்லத்தில் வைத்து , சங்கத் தலைவர் திரு தேவர்பிரான் அவர்கள் தலைமையில் நடந்தது. 

இதில் சங்கப் பொருளாளர் திரு ரெங்கநாதன் அவர்கள் புதல்வியும், லேட் திரு சீனிவாசன் அவர்கள் மனைவியுமாகிய திருமதி ஸ்ரீ ரெங்க நாச்சியார் அவர்களுக்கு , சென்னை OPS வெள்ளாளர் சங்க கூட்டமைப்பு வழங்கிய உதவித் தொகை Rs 8500 /- தையல் மெஷின் வாங்குவதற்கு வழங்கப்பட்டது. 

கூட்டமைப்பிற்கு கோவில்பட்டி சங்கத்தின் சார்பாக நன்றி பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

தையல் மெஷினை சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் 
திரு M. ஞானதேசிகன் அவர்கள் வழங்கினார்கள்.

Essay Competition Info By Shri Rajkumar, Mumbai