75வது பிறந்த நாள் விழா மற்றும் கல்வி அறக்கட்டளை நிறுவன விழா
வைப்பார் திருமதி வேலம்மாள் சுவாமிநாதன் தனது 75வது பிறந்த நாள் விழாவை 08.05.2012 செவ்வாய்கிழமை அன்று வைப்பார் அருள்மிகு விசாலாச்சி அம்பாள் திருக்கோவிலில் வைத்து
சிறப்பாக கொண்டாடினார்கள். அன்று திருநெல்வேலி ஒ.ப.சீ வெள்ளாளர் கல்வி அபிவிருத்தி சங்கத்திற்கு தனது தந்தை திரு அய்யாசாமிபிள்ளை தாயார் திருமதி நல்லசெண்பகசுந்தரராஜ முனியம்மாள்
ஞாபகார்த்தமாக ரூபாய் 50001/- ஐம்பதாயிரத்திஒன்று செலுத்தி அறக்கட்டளை நிறுவினார்கள். அவர்களை பாராட்டி கல்வி அபிவிருத்தி சங்க தலைவர் திரு S.ராமானுஜம் அவர்கள் தலைமையில் பாராட்டுக் கூட்டம் திருமதி சரஸ்வதி
பெரிய திருவடி அவர்கள் இறை வணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டு திருச்சி
திரு முத்துராமன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். திருமதி வேலம்மாள் அவர்களைப் பாராட்டி கல்வி அபிவிருத்தி சங்க
செயலாளர் திரு L.செந்தூர் நாதன் அவர்கள், நெல்லை திரு ஆழ்வாரப்ப பிள்ளை, கோவில்பட்டி சங்கத் தலைவர் திரு தேவர்பிரான், திருச்சி சங்கத் தலைவர் திரு சடகோபன் , சென்னை திருமதி மேனகா சொக்கலிங்கம் , திருமதி சரசு பெரிய திருவடி , கோவில்பட்டி செண்பகசுந்தரம், திருவேங்கடம் V.A.O. சங்கரன் , நெல்லை பாஸ்கரன் ஆகியோர் பாராட்டி பேசினார்கள்.
பாராட்டியவர்களுக்கு திருமதி வேலம்மாள் குடும்பத்தினர் பொன்னாடை போர்த்தி கவுரப் படுத்தினார்கள். திருமதி வேலம்மாள் அவர்களுக்கு கல்வி அபிவிருத்தி
சங்கத்தின் சார்பாக அருள்மிகு விக்ன விநாயகர் படமும் , கோவில்பட்டி சங்கத்தின் சார்பாக அஷ்டலஷ்மி படமும் நினைவுப் பரிசாக
வழங்கப்பட்டது.
பிறந்த நாள் விழா
மதிய உணவிற்குப் பின் கேக் வெட்டி சிறப்பாக பிறந்த நாள் விழா கொண்டாடப் பட்டது.
வருகை தந்த அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கினார்கள். 100 பேர் வரை கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
ராஜபாளையம் திரு சீனிவாசன் என்ற கண்ணன் நன்றியுரை வழங்க விழா
இனிதே நிறைவுற்றது.
விழா ஏற்பாடு: மதுரை திரு D.அருணாசலம் , திரு D. விஸ்வநாதன் , திரு B.அய்யாசாமி, திரு B.முத்துராமன் குடும்பத்தினர் சிறப்பாக
செய்திருந்தார்கள்.
No comments:
Post a Comment