' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

ஒரு நிமிடம் : ஒரு குறள்

Monday, April 9, 2012

வளைகாப்பு விழா

சென்னை கொரட்டூர் திரு R.A.சிங்கபெருமாள் - திருமதி தெய்வம்மாள் மருமகளும், பெருமாள்புரம் திரு சுப்பிரமணியன் - திருமதி முத்தம்மாள் அவர்களின் புதல்வியும், திரு அ.ராமானுஜ வாசன் அவர்களின் மனைவி திருமதி சிவசங்கரி அவர்களின் வளைகாப்பு வைபவம் சென்னை கொரட்டூரில் வைத்து 04.04.2012 புதன்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் கலந்து சிறப்பித்தார்கள். விழாவினில் கவிக்குயில் திருமதி காசினி வேந்தினி ராமானுஜம் அவர்கள் வாழ்த்துப்பா வழங்கினார்கள். 
 
கவிக்குயில் திருமதி காசினி வேந்தினி ராமானுஜம் அவர்கள் வழங்கிய வாழ்த்துப்பா  
 
வரவிருக்கும் தென்றலுக்கு வளர்தமிழில் வாழ்த்து 
 
உம மகவின் அமுதக் குரல் ஒலியினைக் கேட்டு 
உளம் குளிர உம் மகவின் உருவைத்  தழுவி 
(அ)ம்மா , ப்பா எனும் மதலை மழலையை ரசித்து 
அதன் பின் பள்ளி செல்லும் அழகில் மகிழ்ந்து 
கல்வி, கலை எல்லாம் கற்றுத் தேர்ந்து சிறந்து 
பள்ளிப் படிப்பை முடித்துக் கல்லூரியும் சென்று தான் 
எடுத்த பிரிவில் திறமையால், உழைப்பால் வென்று 
ஏற்றமுடைய வேலை பெற்று இல்லறமும் கண்டு 
வாழ்க்கைத் துணை நலம் பேணி வளமாய் உயர்ந்து 
வையகமே வாழ்த்திப் புகழும் வகையாய் வாழ - உன் 
வாழ்க்கைத் துணைவரோடு பெருமிதமாய் கண்டு நிறைந்துமே 
வையகத்தில் வாழ்க நீவிர் வாழ்க பல்லாண்டே !
உம்மைப் பெற்றவர்கள் பாட்டி , தாத்தா , பூட்டி , பூட்டராய் 
உன்னதமாய்த் தம் குல வளர்ச்சியால் நிறைந்து 
எந்நாளும் இங்கிதமாய் இணைந்து வாழ்கவே நம் 
இன்தமிழாய் , பண் சுவையாய் வாழ்க வாழ்கவே !

GOOD LUCK 

No comments:

Post a Comment