' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

ஒரு நிமிடம் : ஒரு குறள்

Saturday, April 28, 2012

மழலைச் செல்வம்

சென்னை கொரட்டூர் திரு அழகிய சிங்கப்பெருமாள் - திருமதி தெய்வம்மாள் அவர்களின் மருமகளும் , திருநெல்வேலி திரு சுப்பிரமணியன்   - முத்தம்மாள் அவர்களின் மகளும் , திரு ராமானுஜ வாசன் (சவுதி) அவர்களின் மனைவியுமான திருமதி சிவசங்கரி க்கு 28.04.2012 காலை திருநெல்வேலியில் வைத்து ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

 

பூப்புனித நீராட்டு விழா

கோவை சங்கத் தலைவர் திரு கல்யாணசுந்தரம் , வடவள்ளி திரு மீனாட்சி சுந்தரம் ஆகியோரின் பேத்தியும் திரு சுப்ரமணியன் - பாப்பம்மாள் (எ) வெண்ணிலா அவர்களின் புதல்வியுமான செல்வி பூஜா வின் பூப்புனித நீராட்டு விழா 25.04.2012 அன்று , வடவள்ளி GCT நகரில் அமைந்திருக்கும் அவர்கள் இல்லத்தில் வைத்து நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டு செல்வி பூஜாவினை ஆசிர்வதித்து சிறப்பித்தார்கள். 

வாழ்த்துக்கள் : கோவில்பட்டி OPS சங்கம். 

கோவில்பட்டி சங்க சிறப்புக் கூட்டம்

கோவில்பட்டி சங்க சிறப்புக் கூட்டம் 22.04.2012 அன்று காலை 10.00 மணிக்கு சனக பொருளாளர் திரு ரெங்கநாதன் அவர்கள் இல்லத்தில் வைத்து , சங்கத் தலைவர் திரு தேவர்பிரான் அவர்கள் தலைமையில் நடந்தது. 

இதில் சங்கப் பொருளாளர் திரு ரெங்கநாதன் அவர்கள் புதல்வியும், லேட் திரு சீனிவாசன் அவர்கள் மனைவியுமாகிய திருமதி ஸ்ரீ ரெங்க நாச்சியார் அவர்களுக்கு , சென்னை OPS வெள்ளாளர் சங்க கூட்டமைப்பு வழங்கிய உதவித் தொகை Rs 8500 /- தையல் மெஷின் வாங்குவதற்கு வழங்கப்பட்டது. 

கூட்டமைப்பிற்கு கோவில்பட்டி சங்கத்தின் சார்பாக நன்றி பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

தையல் மெஷினை சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் 
திரு M. ஞானதேசிகன் அவர்கள் வழங்கினார்கள்.

Essay Competition Info By Shri Rajkumar, Mumbai