கோவில்பட்டி OPS சங்க மாதாந்திரக் கூட்டம் 12.06.2011 அன்று திருவேங்கடம் திரு சங்கரன் VAO இல்லத்தில் வைத்து செல்வன் காந்தி பூவனாதன் இறை வணக்கத்துடன் , சங்கத் தலைவர் திரு தேவர்பிரான் தலைமையில் OPS கல்வி அபிவிருத்தி சங்கத் தலைவர் திரு ராமானுஜம் முன்னிலையில் நடைபெற்றது.
கோவில்பட்டி OPS சங்க செயல்பாடுகள் பற்றி செய்தி மலர் ஆசிரியர் திரு ராமச்சந்திரன், நெய்வேலி திரு ராஜா என்ற சுப்பிரமணியன் ஆகியோர் பாராட்டுத் தெரிவித்துப் பேசினார்கள்.
கோவில்பட்டி சங்கம் சார்பாக ஏற்படுத்தப்பட்டுள்ள இணையத் தளம் இயக்கம் பாராட்டுக்குரியதென உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இந்த மாதத்திற்கான அதிர்ஷ்டசாலி உத்தமபாளையம் மணிமேகலை கணபதி ஆவார் .
கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் திரு சங்கரன் சார்பாக திரு ராஜா என்ற சுப்பிரமணியன் அவர்களும் சங்கத்தின் சார்பில் இணை செயலாளர் திரு சுப்பிரமணியன் அவர்களும் நன்றி தெரிவிக்க கூட்டம் இனிதே நிறைவுற்றது.
No comments:
Post a Comment