' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

ஒரு நிமிடம் : ஒரு குறள்

Monday, June 27, 2011

Comments

வணக்கம்.

very nice to see 
ஒரு நிமிடம் : ஒரு குறள் ..romba nallu irruku...
congrats....   

S.GEETHA SANKAR , Kovilpatti

Saturday, June 25, 2011

பெயர் சூட்டு விழா

24.06.2011 அன்று கோவில்பட்டியில் வைத்து சென்னை திருவள்ளூர் திரு சுப்பிரமணியன் - சங்கரவடிவு , கோவில்பட்டி திரு கனகசபாபதி - பார்வதி இவர்களது பேரனும் , திரு நடராஜன் - செல்லப்பிரியா இவர்களது புதல்வனுக்கு சுப்பிரமணியன் @ பிரித்வீ  என பெயர் சூட்டு விழா நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.

வேலை வாயப்பு

சென்னை குரோம்பேட்டை அஸ்தினாபுரம் திரு ம.ராமலிங்கம் - மீனாட்சி ஆகியோரின் புதல்வன் செல்வன் இரா.மந்திரமூர்த்தி சென்னை மாங்காடு ஸ்ரீ முத்துகுமரன் பொறியியல் கல்லூரியில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று, கல்லூரியில் Infosys சாப்ட்வேர் கம்பெனி நடத்திய வளாகத்தேர்வில் சாப்ட்வேர் இன்ஜினியராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என வீரவநல்லூரிலிருந்து திரு ம.முத்துக்குமார் தெரிவித்துள்ளார்கள்.

கோவில்பட்டி சங்கம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

Wednesday, June 22, 2011

COMPLAINT LETTER TO THE RAILWAYS IN 1909!!!



Okhil Babu's letter to the Railway  department:  



I am arrive by passenger train Ahmedpur station and my belly is too much swelling with jackfruit. I am therefore went to privy. Just I doing the nuisance that guard making whistle blow for train to go off and I am running with lotaah in one hand and dhoti in the next when I am fall over and expose all my shocking to man and female women on platform. I am got leaved at Ahmedpur station. This too much bad, if passenger go to make dung that dam guard not wait train five minutes for him. I am therefore pray your honour to make big fine on that guard for public sake. Otherwise I am making big report to papers.

Okhil Chandra Sen wrote this letter to the Sahibganj divisional railway office in 1909. It is on display at the Railway Museum in New Delhi. It was also reproduced under the caption Travellers Tales in the Far Eastern Economic Review.

Any guesses why this letter is of historic value?




It led to the introduction of TOILETS in trains in India.....!!!!



So please don't think any idea is stupid and discard it. 
Always Speak up. 

This blog thanks Shri Anandakannabiran , Chennai and Shri Arumugasundaram of Indonesia for this post,(eventhough this forwarded  email which has no genesis or authentication the subject is very interesting and informative)

Tuesday, June 21, 2011

கோவை சங்க செயற்குழுக் கூட்டம்

கோவை OPS சங்க செயற்குழுக் கூட்டம் 15 .06 .2011 அன்று இந்தியன் ஸ்கேல் கம்பனியில் வைத்து மாலை 6 மணிக்கு நடைபெற்றது. 

 கோவை குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வரும் திரு N . சண்முகசுந்தரம் அவர்களுடைய மகன் செல்வன் விகாஸ் நாராயணனுக்கு   (16 வயது), உதவி செய்த கீழ்க்கண்டவர்களுக்கு நிர்வாகிகள் நன்றி தெரிவிப்பு தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

திரு அனந்த ராமநாதன் ரூ 25000 /- 
OPS கூட்டமைப்பு ரூ 8000/-
செய்தி  மலர் ஆசிரியர் திரு அனந்த கண்ணபிரான் ரூ 2500 /-
 

கோவை சங்கம் சார்பாக செய்தி அளித்தவர் செயலாளர் திரு M .R .திருவடி அவர்கள்.
கோவில்பட்டி சங்கம் செல்வன்  விகாஸ் நாராயணன் விரைவில் குணம்பெறப் பிரார்த்திக்கிறது.

Monday, June 20, 2011

COMMENTS

This site is very useful & informative.....
-v.krishna kumar

Monday, June 13, 2011

வளைகாப்பு

திருவேங்கடம் திரு சங்கரன் - மீனாலட்சுமி தம்பதியனரின் மகன் நெல்லை நாயகத்தின்  மனைவியும் மதுரை திரு கோபாலகிருஷ்ணன் - ராமலட்சுமி தம்பதியனரின் மகளுமாகிய திருமதி கோமதி (எ) உஷாவிற்கு 12.06.2011 அன்று வளைகாப்பு திருவேங்கடத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது.

திருமண உறுதி தாம்பூல விழா அழைப்பிதழ்

ஆலங்கிணறு திரு நா. மாணிக்கவாசகம்பிள்ளை , மதுரை தாசில்தார் தெய்வத்திரு சொக்கலிங்கம்பிள்ளை இவர்களின் பேரனும் , கோவில்பட்டி திரு ஞானதேசிகன் - திருமதி மரகதம் தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வன் 
சிரஞ்சீவி ஞா .மாணிக்கவாசகம் B.E.,
கோயம்புத்தூர் தெய்வத்திரு சுப்பிரமணியபிள்ளை , விக்கிரமசிங்கபுரம் தெய்வத்திரு கல்யாணசுந்தரம்பிள்ளை இவர்களின் பேத்தியும் சென்னை திரு முத்தையா - வள்ளிமயில் தம்பதியினரின் புதல்வி 
 திருவளர்செல்வி மு . கம்ல கல்யாணி (எ) மாலினி B.E.,
இவர்களின் திருமண உறுதி தாம்பூல வைபவம்  நிகழும் மங்களகரமான 1186 ம் ஆண்டு , ஸ்ரீ கர வருடம் ஆனி மாதம் 4 ம் தேதி (19 .06 .2011) ஞாயிறன்று சதுர்த்தி திதியும் திருவோண நட்சத்திரமும் கூடிய சுப யோக சுப தினத்தில் காலை 10 மணிக்கு மேல் 11 மணிக்குள் சென்னை குரோம்பேட்டை அடையாறு ஆனந்தபவன் ஸ்ரீ சப்தகிரி ஹாலில் நடைபெற உள்ளது என கோவில்பட்டி ஞானதேசிகன் (IOB) அவர்கள் தெரிவித்து, அதற்கு தாங்கள் தங்கள் சுற்றம் சூழ வந்திருந்து ஆசீர்வதிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளர்கள்.


COMMENTS

It is privilege to note that our sangam has exploited the latest technique. It will reach greater heights in future.  
Shenbagasundaram, kovilpatti

Sunday, June 12, 2011

மழலைச் செல்வம்

சென்னை திரு நடராஜன் - செல்லப்பிரியா தம்பதியருக்கு 09.06.2011 அன்று கோவில்பட்டியில்  ஆண் குழந்தை பிறந்துள்ளது.

மாதாந்திரக் கூட்டம்

கோவில்பட்டி OPS  சங்க மாதாந்திரக் கூட்டம் 12.06.2011 அன்று திருவேங்கடம் திரு சங்கரன் VAO இல்லத்தில் வைத்து செல்வன் காந்தி பூவனாதன் இறை வணக்கத்துடன்  , சங்கத் தலைவர் திரு தேவர்பிரான் தலைமையில் OPS கல்வி அபிவிருத்தி சங்கத் தலைவர் திரு ராமானுஜம் முன்னிலையில் நடைபெற்றது. 
கோவில்பட்டி OPS  சங்க செயல்பாடுகள் பற்றி செய்தி மலர் ஆசிரியர் திரு ராமச்சந்திரன், நெய்வேலி திரு ராஜா என்ற சுப்பிரமணியன் ஆகியோர் பாராட்டுத் தெரிவித்துப் பேசினார்கள். 
கோவில்பட்டி சங்கம் சார்பாக ஏற்படுத்தப்பட்டுள்ள இணையத் தளம் இயக்கம் பாராட்டுக்குரியதென உறுப்பினர்கள் தெரிவித்தனர். 
இந்த மாதத்திற்கான அதிர்ஷ்டசாலி உத்தமபாளையம் மணிமேகலை கணபதி ஆவார் .
கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் திரு சங்கரன் சார்பாக திரு ராஜா என்ற சுப்பிரமணியன் அவர்களும் சங்கத்தின் சார்பில் இணை செயலாளர் திரு சுப்பிரமணியன் அவர்களும் நன்றி தெரிவிக்க கூட்டம் இனிதே நிறைவுற்றது. 

Saturday, June 11, 2011

பல்கலைகழகத் தேர்வில் 4 ம் (University 4th) இடம்

                                   கோவில்பட்டி திரு தெய்வநாயகம் - செல்லம்மாள் தம்பதியினரின் இளைய புதல்வி செல்வி கஸ்தூரி ஏப்ரல் 2011 -ல் நடைபெற்ற மதுரை காமராஜர் பல்கலைகழகத் தேர்வில்  B .Com (C .A .) துறையில்  (University 4th)  4 ம்  இடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். 
OPS கோவில்பட்டி சங்கம் அவரைப் பாராட்டுகிறது.

Thursday, June 9, 2011

+2 தேர்வில் சாதனை

திரு பிரமநாயகம் - சகுந்தலா மற்றும் திரு நாராயணன் - செண்பகம் இவர்களின் பேத்தியும் தூத்துக்குடி திரு சங்கரநாராயணன் (கதிர்) - ஆண்டாள் தம்பதியரின் புதல்வி செல்வி சுதாமதி +2 தேர்வில் 1144 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். 

திரு கோவிந்தராஜ்  - புவனேஸ்வரி  மற்றும் திரு நாராயணன் - செண்பகம் இவர்களின் பேத்தியும் சென்னை  திரு சுந்தர்  - சங்கரி  தம்பதியரின் புதல்வி செல்வி ரம்யா சுந்தர்  +2 தேர்வில் 1132 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். 
 

OPS கோவில்பட்டி சங்கம் சாதனையாளர்களை  பாராட்டுகிறது. 

Admissions

1) Admission in PG, PG Diploma, Certificate Courses (MA, MPA,MSc,MBA, M.Tech, MCA, M.Lib.Sc, MSW, etc) under Bharathi Dasan University, Trichy- 24. Last Date Extened for PG-24.6.2011; PG Diploma, Cerificate courses- 15.7.2011.Details at www.bdu.ac.in.

2) Legal & Cyber on line Education, under Indira Gandhi National Open University;  (Intellectual Property Law; Legal Process Outsourcing; Para Legal Practice; Cyber Law, etc; Details www.ignou.ac.in; Last Date 29.7.2011.
Information by Shri Rajakumar, New Delhi

Recruitments:


  Repco Bank:  ( Govt. of India Enteprise, Chennai as Hqrs)     193 Jr. Asistants;  45 Scale - I Officers;
Details www. repcobank.com; Last Date 9.7.2011.
Information by Shri Rajakumar,New Delhi

Wednesday, June 8, 2011

OPS வலைத்தளத்தின் மொபைல் போன் வடிவம்

இன்று முதல் மொபைல் போனில் எளிதாக இந்த வலைத்தளம் காணும் வகையில் புதிய Mobile Version -ல் நமது வலைத்தளம் இயங்கத் துவங்கியுள்ளது.  மொபைல் போனில் இத்தளத்தைப் பார்த்தவர்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.

Tuesday, June 7, 2011

Comments from Shri Kathir

CONGRATULATIONS TO YOUR TEAM. THE WEBSITE IS VERY USEFUL AND INFORMATIVE.

P. SANKARA NARAYANAN, TUTICORIN

Latest Employment information

 4987 Probationary Officers in Associate Banks of SBI.  For Details visit  SBI's web site www.statebankofindia.com Last Date 25.06.2011 (On line)
Information given by Shri Rajakumar S K N, New Delhi.

Monday, June 6, 2011

Comments from Shri Rajakumar S K N, New Delhi

It is indeed an extraordinary effort to bring an on-line platform for our community. I am sure, this 'blog' would bring more participation by the members of our community, particularly, the younger generations.
As a professional, i understand, the efforts,pain & the hard-work, put in by you & your team in the design,creation & hosting of this site. I would rate this site as an 'Excellent'creation ( from the point of aesthetics, design, coverage, additional info ,links added etc even in its 1st version).

I have the following suggestions:
 
1) Please add the latest Address & Telephone Directory for the benefit of our community &  members (with regular updates on a regular interval).


2) If possible you may upload the 'Seithimalar' on this site (in PDF format) for the benefit of on-line community.
Of course with necessary security and restriction for the bonafide use by the members.

Once again my best wishes to you & your team for this laudable service.


With Wishes,
Rajakumar S K N
New Delhi.
mail: rkocc@yahoo.com

Sunday, June 5, 2011

ஒரு சிறிய கட்டுரைப் போட்டி :

நம் OPS மாணவர்களுக்கு ஒரு சிறிய கட்டுரைப் போட்டி :

Title : SCIENTIFIC IDEAS FOR THE TODAY'S WORLD

இரு பக்கங்களிற்கு (50  வரிகள்) மிகாமல் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் எழுதி opsvellalar@gmail.com என்ற e-mail முகவரிக்கு அனுப்பவும். அல்லது கீற்கண்ட முகவரிக்கு தபாலில் அனுப்பவும். 

    திரு தேவர்பிரான் ,
    நம்மாழ்வார் நகர்,
    கே.ஆர். நகர் அஞ்சல்,
    நலாட்டின்புத்தூர் 628 503 . 


உங்கள் பெயர், தந்தை பெயர், முகவரி, வகுப்பு அல்லது வருடம் , பள்ளி அல்லது கல்லூரியின் பெயர் மற்றும் தொலைபேசி எண் முதலிய விவரங்களையும் கொடுக்கவும்.  தகுதி பெரும் அனைத்து படைப்புகளும் இத்தளத்தில் இடம்பெறும். அவற்றில் ஒரு கட்டுரை பரிசுக்காகத் தேர்ந்தெடுக்கப்படும்.  பரிசுக் கட்டுரை தேர்ந்தெடுப்பவர் விவரம் விரைவில் இத்தளத்தில் தெரியப்படுத்தப்படும். 
 
கட்டுரைகள் அனுப்ப கடைசி நாள் : 15.06.2011.

கட்டுரைப்போட்டிக்கான பரிசினை வழங்குபவர்கள்:
கோவில்பட்டி திரு நெல்லையப்பன்  - சூடி நெல்லையப்பன்

Saturday, June 4, 2011

"ஒரு நிமிடம் : ஒரு குறள்" புதிய பகுதி

                                     புதியதாக இன்று முதல் நமது இத்தளத்தில் "ஒரு நிமிடம் : ஒரு குறள்" எனும் பகுதி, பதிவுகளுக்குக் கீழே இடம்பெற்றுள்ளது.  ஒவ்வொரு நிமிடமும் ஒரு திருக்குறளும், அதற்கான சிறு பொருள் விளக்கமும் இடம்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது .