இன்று (09.11.2011) திரு கார்த்தி சங்கர் அவர்கள் ஒரு விழாவில் சந்தித்த பொழுது, நமது உறுப்பினர்கள் தங்களது படைப்புகளை (கவிதை, கட்டுரை, வரைபடங்கள் , PHOTOS , ETC.,) இந்த BLOG-ல் வெளியிடலாமா? என கேட்டார்.
இந்த வெப் சைட் ஆரம்பத்ததின் நோக்கமே நமது உறுப்பினர்கள் அனைவருக்கும் எந்த பாகுபாடின்றி , எல்லா INFORMATION ம், உடனுக்கு உடன் சென்று அடைய வேண்டும் என்பதும், மற்றும் நம் OPS குடும்பத்தினரின் திறமைகளை வெளிகொணர்ந்து அதனை மேம்படுத்த வேண்டும் என்பதுதான். கட்டுரைப் போட்டி இத் தளத்தில் நடத்தப்பட்டதின் நோக்கமும் அதுதான்.
எனவே முன்னரே கேட்டுக்கொண்டதுபோல் யார் வேண்டுமானாலும் அவர்களது படைப்புகளை எந்த மொழியிலும் இந்த இணைய தள E-MAIL ID க்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். அவை இத் தளத்தில் வெளியிடப்படும். அனுப்புவதில் சந்தேகம், சிரமம் இருப்பின் எனக்கு MOBILE மூலம் தெரியப்படுத்தவும்.
நமது இணையத்தளத்தினை மேம்படுத்த யோசனைகளையும் வரவேற்கிறேன். ஏற்கனவே புது டில்லியிலிருந்து மரியாதைக்குரிய திரு ராஜ்குமார் அவர்கள் நமக்கு வேலை வாய்ப்பு மற்றும் கல்வி செய்திகளை எளிய முறையில் தொகுத்து வழங்கி வருகிறார்கள். அவர்கள் தரும் செய்திகள் அனைத்தும் அரிதாகும். அதனை நாம் அனைவரும் சரியான நேரத்தில் , சரியான முறையில் உபயோகித்து பயனடைய வேண்டுகிறேன்.
நம் தளத்தில் தற்போது E-MAIL ALERT SYSTEM அறிமுகப்படுத்தபட்டுள்ளது . (இதில் பதிவு செய்பவர்களுக்கு, ஏதேனும் புதிய செய்திகள் இத்தளத்தில் இடம்பெற்றால் உடனே அதன் சாராம்சம் அவர்களுக்கு EMAIL மூலம் அனுப்பப்படும்). அதே போல் SMS ALERT சிஸ்டம்-ம் விரைவில் இடம் பெற இருக்கிறது. இது போல் ஏதேனும் IDEAS இருந்தால் அதனை வரவேற்கிறேன்.
நன்றி.
நெல்லையப்பன், கோவில்பட்டி
எனது கருத்தை தெரிவித்ததற்க்கு நன்றி....by karthik
ReplyDelete