ஓ ப சீ வேளாளர் கல்வி அபிவிருத்தி சங்கம், திருநெல்வேலி - 6
ஓ ப சீ மாதர் சங்கம் : திருநெல்வேலி
12.11.2011 அன்று ஓ ப சீ மாதர் சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம், திருநெல்வேலி ,மகாராஜா நகர் ,உயர்நீதி மன்ற வழக்கறிஞர் திரு ஆ. சங்கரசுப்ரமணியன் அவர்கள் இல்லத்தில் திருமதி , திருமதி லலிதா சங்கரசுப்ரமணியன் அவர்கள் தலைமையில் இறைவணக்கத்துடன் ஆரம்பித்து , கூட்டுப் பிரார்த்தனையுடன் திருமதி லலிதா சங்கரசுப்ரமணியன் அவர்கள் அர்ச்சிக்க , உறுப்பினர்கள் வழிபாடு பாட நடந்தது. மாதர் சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு மாதாந்திர சீட்டு மற்றும் மாதாந்திர குலுக்கல் நடைபெற்று மாதர் சங்கத்திற்கு வழக்கம் போல் நன்கொடை அளித்தனர்.
சமீபத்தில் நடைபெற்ற சதாபிஷேக விழா தம்பதியர் திரு ஆ.சங்கரசுப்ரமணியன் மற்றும் திருமதி லலிதா சங்கரசுப்ரமணியன் ஆகியோரிடம் கலந்து கொண்ட மாதர்கள் தங்கள்தம் குடும்பத்துடன் வணங்கி ஆசி பெற்றனர். விழா தம்பதியர் ஆசி வழங்கி பரிசுகளும் வழங்கினர்.
சங்கத்தலைவி திருமதி கோதை சங்கரன் அவர்கள், திருமதி & திரு ஆ. சங்கரசுப்ரமணியன் அவர்களுக்கும் , கூட்டத்திற்கு வந்திருந்த உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி கூறினார்.
அடுத்த மாதாந்திரக் கூட்டம் தலைவி திருமதி கோதை சங்கரன் அவர்கள் இல்லத்தில் 10.12.2011 அன்று நடத்த தீர்மானிக்கலாயிற்று.
செய்தி அளித்தவர் திருநெல்வேலி திரு செந்தூர் நாதன்,
செயலாளர் ,
ஓ ப சீ வேளாளர் கல்வி அபிவிருத்தி சங்கம், திருநெல்வேலி அவர்கள்.
No comments:
Post a Comment