கோவில்பட்டி சங்க நவம்பர் மாதக் கூட்டம் 09.11.2011 அன்று கோவில்பட்டி சங்க நிர்வாக கமிட்டி உறுப்பினர் திரு ஞானதேசிகன் (ரவி) அவர்கள் மகன் திரு மாணிக்கவாசகம் திருமண வரவேற்பு நிகழ்ச்சியன்று கோவில்பட்டி செல்வ மகாலில் வைத்து தலைவர் திரு தேவர்பிரான் அவர்கள் தலைமையில் ,பொருளாளர் திரு ரெங்க நாதன் அவர்கள் இறைவணக்கத்துடன் துவங்கியது.
மணமக்களை வாழ்த்தி சங்கம் சார்பாக வாழ்த்து மடலும், நினைவு பரிசும் வழங்கப்பட்டது.
கூட்டத்தில் புது டில்லி திரு ராஜ்குமார் (விட்டல்) அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு , கோவில்பட்டி சங்க செயல்பாடுகள் பற்றியும் , இணைய தள உபயோகம் பற்றியும் பாராட்டி பேசினார்கள். மேலும் இணைய தளத்தில் வழங்கும் வேலை வாய்ப்பு மற்றும் கல்வி (Foreign opportunities with Scholarship )செய்திகளை இளைஞர்கள் பயன்படுத்தி நாம் முன்னேற வேண்டும் என வலியுறுத்தினார்கள்.
சங்க செயல்கள் பற்றி விவாதிக்கையில் மாணவ மாணவியர்க்கு ஊக்குவிக்கும்படி கட்டுரை, ஓவிய போட்டிகள் ஏற்படுத்த வேண்டும் என கருத்து தெரிவித்து செல்வன் கார்த்தி சங்கர் மற்றும் பொறியாளர் செல்வி சண்முகப்ரியா ஆகியோர் பேசினார்கள்.
சிறப்பு விருந்தினர் திரு ராஜ்குமார் (விட்டல்) அவர்களுக்கு சங்கத்தின் சார்பாக திரு நெல்லையப்பன் அவர்களால் பொன்னாடை போற்றி கவுரவிக்கப்பட்டது.
இம்மாத அதிர்ஷ்டசாலி செல்வி சண்முகப்ரியா.
திரு செண்பகசுந்தரம் அவர்கள் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.
No comments:
Post a Comment