' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

ஒரு நிமிடம் : ஒரு குறள்

Thursday, October 6, 2011

பொது நல ஷேம நிதி & ஓ.பி.எஸ். வெள்ளாளர் சங்கம், கோவை


280வது கூட்டம் 25/09/2011 அன்று மதியம் 3 மணிக்கு திரு எ.தர்மபுத்திரன் மற்றும் திரு ஆர், ஸ்ரீதரன் அவர்கள் இல்லத்தில் (பல்லடம்) ந்டைபெற்றது.

இறைவணக்கம் திரு ச.ஈஸ்வரன், உதவி தலைவர் அவர்களால் பாடப்பெற்றது.


மறைந்த உறவினர்களுக்கு இரு நிமிடங்கள் அனுஷ்டிக்கப்பட்டது.


தலைவர் திரு பி.கல்யாணசுந்தரம் தனது முன்னுரையில் தொடர் கூட்டமாக நடைபெறுவது கண்டு தான் பெருமகிழ்ச்சியடைவதாக கூறினார். அவர் பொன்விழா கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.


ஆகஸ்டு மாத சங்க அறிக்கை பொது செயலாளர் திரு எம்.ஆர். திருவடி அவர்களால் சர்பிக்கப்பட்டு, அது எல்லோராலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.


சங்கத்தின் ஆகஸ்டு மாத வரவு செலவு அறிக்கை பொருளாளர் திரு எம்.ஆர். ஆழ்வாரப்பன் அவர்களால் வாசிக்கபபட்டு, கரகோஷத்துடன் ஏகமனதாக அனவராலும் ஏற்றுக்கொண்டது.


கல்லூரியில் பயிலும் கல்வி உதவி தொகை எல்லோருக்கும் அளிக்க வேண்டும் அல்லது எந்தெந்த பாட பிரிவுகளுக்கு அளிக்க முடியும் என்பதனை ஒ.பி.எஸ். கூட்டமைப்பு ந்மது இன இதழ் ஒ.பி.எஸ். செய்தி மலரில் வெளியிடுமாறு உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்தார்கள்.


2011-2012 ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை விபரம் கீழ்வருமர்று:


டி.எ.பி. டிரஸ்ட் 21,700

ஒ.பி.எஸ். கூட்டமைப்பு 18,500
பொது நல சேமநிதி 15,000
பொது நல சேமநிதி ஊக்க தொகை 1,050
ஆக மொத்தம் வழ்ங்கிய தொகை 56,250

கல்வி நன்கொடை அளித்த உறுப்பின்ர்கள், டி.எ.பி. டிரஸ்ட், ஒ.பி.எஸ். கூட்டமைப்பு, பொது நல சேமநிதி எல்லோருக்கும் பொருளாளர் திரு எம்.ஆர்.ஆழ்வாரப்பன் சங்கத்தின் சார்பாக நன்றி தெரிவித்தார். 26.01.2012 வியாழக்கிழமை அன்று கோவை பொது நல சேம நிதியின் 52 ஆம் ஆண்டு விழா ஒ.பி.எஸ் வெள்ளாளர் சங்க17ம் ஆண்டு விழா நடத்தலாம் என்று உறுப்பினர்களின் கரகோஷதோடு தீர்மானம் நிறைவேறியது

பொதுநல சேம நிதியின் 52ஆம் ஆண்டு விழாவும், ஒ.பி.எஸ். வெள்ளாளர் சங்கத்தின் 17வது ஆண்டு விழா நிர்வாகிகள் பின்வருமாறு:

குழூ தலைவர் திரு. தோ.சாத்தூரப்பன்
உதவித் தலைவர் திரு. அனந்த கண்ணபிரான்
பொது செயலாளர் திரு. ச.ஈஸ்வரன்
உதவி செயலாளர் திரு.கோ.சீனீவாசன்
பொருளாளர் திரு. கோ.சங்கரலிங்கம்

செயற்குழு உறுப்பினர்கள்
திரு. ச.வெங்கட்ராமன்
திரு. எஸ்.எஸ்.மணி
திரு. க.குமாரசாமி
திரு. கோ.பட்சிராஜன்
திரு. மு.இராமசுப்பிரமணியன்
திரு. புன்னைவனம்
திரு. கோ.சொக்கலிங்கம்
திரு. பூ. குத்தாலிங்கம், திருப்பூர்
திரு. ஜி.சிவசுப்பிரமணியன், திருப்பூர்
திரு. ந, வீரகுமார்
திரு. ரா. ஸ்ரீதரன்,பல்லடம்
திருமதி அகிலா சொக்கலிங்கம்
திருமதி. ராஜம்மாள் அப்பசாமி, திருப்பூர்
திரு. வெ. கணேசன்
திருமதி. மகாலட்சுமி ஆழ்வாரப்பன்

நமது பொது செயலாளர் திரு எம்.ஆர். திருவடி அவர்களை ஒ.பி.எஸ். கல்வி அபிவிருத்தி சங்கத்தின் ஆட்சி மன்ற குழுவில் உறுப்பினராக தேர்ந்தெடுத்த்ற்கு பொது குழு உறுப்பினர்கள் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தார்கள். செயலாளரின் சார்பாக நெல்லை ஒ.பி.எஸ். கல்வி அபிவிருத்தி சங்கத்திற்கு நன்றி கடிதம் எழுதுமாறு உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டார்கள்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வி அபிவிருத்தி சங்க நிர்வாகிகளுக்கு கோவை ஒ.பி,எஸ். சங்கம் தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

உடுமலைப்பேட்டை ஒ.பி.எஸ். தலைவர் திரு வி.எஸ். பட்சிராஜன் அவர்கள் சிறப்புறை ஆற்றும்போது, உறுப்பினர்கள் தங்களது சந்ததிகளுக்கு தத்தம் மூதாதையர்கள் பெயரையும், உறவு முறையையும் தெரிவிக்க வேண்டும்.

அடுத்த கூட்டம் திரு எம்.சுப்பிரமணியன், த/பெ திரு உ. மீனாட்சிசுந்தரம் அவர்கள் சார்பாக நடைபெற உள்ளது. நடைபெறும் தேதியும், இடமும் பின்னர் தெரிவிக்கப்படும்.

இறுதியாக, உதவி செயலாளர் திரு.கோ.சங்கரலிங்கம். அமைதியாக கூட்டம் நடத்தி தந்த உறுப்பினர்களுக்கும், கூட்டம் நடைபெற இடம் கொடுத்தது மட்டுமில்லாமல், இனிய சிற்றுண்டி வழ்ங்கிய திரு ஆ. தர்மபுத்திரன், திரு ரா. ஸ்ரீதரன், திருமதி முத்து தர்மபுத்திரன், திருமதி உஷா ஸ்ரீதரன் தனது நன்றியையும், சங்கத்தின் ந்ன்றியையும் தெரிவித்தார்.


பா. கல்யாணசுந்தரம், தலைவர் மற்றும் எம்.ஆர். திருவடி பொது செயலாளர் 
அவர்கள் சார்பாக  செய்தி அளித்தவர் கோவை ராமசுப்ரமணியன் அவர்கள் 
 

1 comment:

  1. SEITHIKALAI PADITHTHU MAHIZHNTHOM!!NANTRI PALA.!!! L.CHENDURNATHAN SECRETRAY OPS VELAALAR KALVI SANGAM TNY

    ReplyDelete