' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

ஒரு நிமிடம் : ஒரு குறள்

Tuesday, July 19, 2011

பத்ராசலம் ஸ்ரீ சீதா ராமச்சந்திர சுவாமி கோவில்

 பத்ராசலம் ஸ்ரீ சீதா ராமச்சந்திர சுவாமி கோவில்
        (ஆந்திரா மாநிலம் )
                               கடந்த வாரம் ஹைதராபாத் சென்ற போது, 'பத்ராசலம்'  ஸ்ரீ சீதா ராமச்சந்திர சுவாமி  கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும்'  என்ற,-  எனது  நீண்ட நாள் விருப்பத்தை  நனவாக்க முடிந்தது.  அந்த அனுபவம், மற்றும் அந்த கோவிலின் சிறப்பு,  மற்ற விவரங்களை இத்தளத்தின் பார்வையாளர்களுக்கு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
                             தெலுங்கானா பிராந்தியத்தில், கோதாவரி நதி கரையில் அமைந்த மிக அமைதியான, பழமையான, ஒரு கோவில் இது. பழைய இதிகாசங்கள் படி,  இந்த கோவில், இராமாயண கால வரலாரையும்,  இங்குள்ள பகுதிகள், இராமாயணகால 'தண்டகாரண்யா'  காட்டையும் நினைவு படுத்துவதாக இன்றும் நம்ப படுகிறது.
.   இந்த பகுதியில்தான், இராமர், தனது துணைவி சீதா, மற்றும் இளையோன் இலக்குவன் உடன்,  வனவாசம் வாழ்ந்ததாக கருதப்படுகிறது.  பொன் மான்,வேடத்தில் மாரீசன் இந்த கானகத்தில் தோன்றி, இராவணனால் சீதை அபகரிக்கப்பட்ட இடம் என்று கருதும் இடமான  'பர்னசாலா' இந்த ஊருக்கு அருகில் தான் உள்ளது.   இந்த கோவில் இருக்கும் மலைமீதுதான்,  இராம அவதாரத்திற்கு பிறகு,  மகா விஷ்ணு,  ஏற்கனவே கொடுத்த வரப்படி,  பகவான்  ராமச்சந்திர மூர்த்தியின் அருளை வேண்டி பல யுகங்கள் தவம் செய்த அன்பர் 'பத்ரன்'  க்கு மனமிரங்கி  இராமனாக தோன்றி காட்சி அளித்ததாகவும் செய்தி,.
                               இந்தக்கோவில் பக்த ராமதாசால் பதினேழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அன்றைய நவாபின் அனுமதி இல்லாமல், அரசாங்க பணத்தை கோவில் நிறுவ பயன்படுத்தியதற்காக பக்த ராமதாஸ் பனிர்ரெண்டு ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்தார். இந்த சிறை நாட்களில் தான், பக்த
ராமதாசின்,  மிக பிரசித்தி பெற்ற  'தசரதி சதகம்', ' ராம கீர்த்தனை'கள் இயற்றப்பட்டன. பக்தனின் கஷ்டத்திற்கு மனமிரங்கி, இறைவன் ராமர்,  தனது
தம்பி இலக்குவனுடன்;   -' ராமோஜி , லக்மொஜி' -  வேடத்தில் சென்று அரசாங்க பணத்தை ராமதாசின் சேவகர் களாக திருப்பி செலுத்திய வரலாறு  இந்தகோவிலுக்கு உண்டு. இறைவனின் மகிமயை  உணர்ந்த நவாப்,  பணத்தை வாங்காமல், இறைவனின் திருவிளையாடலை உணர்ந்து ,   இரு 'மோகர்'  நாணயம் மட்டும் , கடவுளருள் நினைவாக எடுத்துக்கொண்டார் என்பது கடந்தகால வரலாறு. அந்த நாணயம் இன்றும் இந்த கோவில் தேவஸ்தானத்தில் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளது.
                           நீண்ட நாட்களுக்கு பிறகு, மக்கள் நெருக்கம், ஆரவாரம் இல்லாத, சுப்ரபாதம் சேவையை,  ,அதி காலை நாலரை மணிக்கு,  மூலவர் சன்னதியில், பார்த்து அனுபவித்த மன நிறைவு,  சமீப காலங்களில்,  வேறு எங்கும்  நான் அனுபவித்ததாக எனக்கு நினைவில்லை. அதை விட பெருமகிழ்ச்சி என்னவென்றால், காலை திருவ்னந்தால் போது கேட்ட திருப்பாவை- சாத்துமுறை, இரவு ஏகாந்த சேவை நேரத்தில் கேட்ட திவ்ய பிரபந்தமும் - பல்லாண்டு,பல்லாண்டு - கேட்ட அனுபவம் மறக்க முடியாத ஒன்று.


                           இத்தகைய அனுபவங்கள், என்னுடைய கல்லூரி நாட்களில் படித்த,   பேரறிஞர் ரஸ்ஸல் எழுதிய கட்டுரயின் கீழ்க்கண்ட வார்த்தைகளை நினைவு படுத்துகின்றன .

                                                     Is Happiness Still Possible?      Yes!!!
                           நீங்களும் அனுபவிக்க வேண்டும்  என்ற எண்ணத்தில் இத்துடன் சில ஆடியோ, வீடியோ மற்றும் போட்டோ பகுதிகள்தொகுகப்பட்டுள்ளன.

(Source/ References  -   Devastanam site/other web resources)


 ஸ்ரீ. கா. ந . இராஜகுமார் , புது டெல்லி.
rkocc@yahoo.com


 ஆடியோ, வீடியோ கீழே
You tube link about this temple

4 comments:

  1. I thank MR.RAJKUMAR its very nice. but vedio is error. once again i thank you very much for artical. ktr walajabad

    ReplyDelete
  2. Images and Videos of sri seetha ramachandra swamy temple is nice.....
    I think Mr.Rajkumar is the first one to upload the videos...
    THANKS to him...

    -V.Krishna Kumar & Family

    ReplyDelete
  3. ராஜ்குமார் வணக்கம் ...
    தாங்கள் அனுப்பியுள்ள செய்திகள் புகைபடங்கள் பார்த்தேன் எங்களுக்கு நல்ல வாய்ப்பை அளித்தமைக்கு நன்றி.

    - C.Ranganathan (Treasurer)
    O.P.S Vellalar sangam Kovilpatti.

    ReplyDelete
  4. Respect and that i have a nifty present: How To Renovate House Exterior home renovation contractors gta

    ReplyDelete