' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

ஒரு நிமிடம் : ஒரு குறள்

Wednesday, July 6, 2011

ஸ்ரீ அப்பன் வெங்கடாசலபதி கோவில்,சேரன்மகாதேவி

 மணம் கமழும் பொதிகை தென்றலும், தாமிரபரணி ஆறும் சூழ்ந்த சேரன்மகாதேவியில் அமைந்துள்ள ஸ்ரீ அப்பன் வெங்கடாசலபதி கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. ஆற்றங்கரையோரம் பசுமையான வயல் வெளி சூழ அழகாக வடிவமைக்கப்பட்ட கோவிலில் பெருமாள் தனி சந்நிதியிலும் , இரு தாயார்கள்  தனி தனி சந்நிதியிலும் இருந்து அருள் மழை பொழிகிறார்கள். சிறிய திருவடியாம் ஆஞ்சநேயர் தனியே அழகுற இருப்பது எப்பொழுதும் "ராம் ராம் " என்று சொல்வது போலவே உள்ளது. பெருமாள் திருமலை திருப்பதி போலவே சிறிய வடிவில் கண்ணைக் கவரும் அழகில் ஜொலிக்கிறார். 140 வருடங்களுக்கு மேலாக பராமரிப்பின்றி இருந்த இக்கோவிலை இந்த ஊர்க் காரர்கள் சிரமமெடுத்து தற்சமயம் திருப்பணிகள் செய்து மஹா  சம்ப்ரோசணம் நடத்தி உள்ளார்கள். நமது உறவினர் எனது கொழுந்தனார் சேரன்மகாதேவி திரு மந்திரமூர்த்தி (Indian Bank) அவர்கள் எங்களுடன் வந்திருந்து கோவிலின் சிறப்புகளை எடுத்துரைத்தார்கள். கோவிலில் எடுத்த சில PHOTOS கோவிலின் அழகினை எப்பொழுதும் காண அழைக்கின்றன. நீங்களும் ஒரு முறை இக்கோவிலுக்கு சென்று ஸ்ரீ அப்பன் வெங்கடாசலபதியின் அருள் பெற்று வாருங்களேன். 

மீனா தேவர்பிரான், நாலாட்டின்புத்தூர். 

3 comments:

  1. It is a welcome effort to know the less visited but old well cherished temples. Our land, known as 'Land of Temples' has many such wonderful temples which are little known/least visited.
    The OPS family & the members endowed with a life style, based on religious faith, visit often various temples. I am sure, many such reporting from our members, including about their family temples/ deities, 'Kula Theivams' etc. may add to the viewers delight and enrich their mind & soul.
    My sincere thanks to Mrs Meena Devarpiran for her effort & wish her to report more such visits.

    Rajakumar
    New Delhi.

    ReplyDelete
  2. Sri Appan vengatachalapathi kovil photo and articals are nice. d.deivu

    ReplyDelete
  3. கட்டுரையும், படங்களும் அருமை. காலத்தின் வேகத்தில் இணையதளம் என்பது கட்டாய தேவை. கட்டுரைகள், நிகழ்வுகள் போன்றவற்றை வலைப்பூவில் ஏற்றியவுடன் அதன் தலைப்புகள் (ஆசிரியரின் பெயருடன்) குருஞ்செய்தியாக செல்பேசிக்கு அனுப்பினால் மேலும் பயளுள்ளதாக இருக்கும். :)
    கோவில்பட்டி சங்க முயற்சியை பாராட்டுகிறேன். மற்ற சங்கங்களும் பின்பற்றும் என எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள்..!!

    ReplyDelete