ஸ்ரீ தாச்கணு மகராஜ் படைத்த ஸ்ரீ சாயிநாத தவன மஞ்சரி
(தமிழில் வெண்பாமாலை by திரு ராமானுஜகள்ள பிரான் (TRK) அவர்கள்)1. கௌரியின் மைந்தன் கணேசனே போற்றினேன்
மௌன மனமெட்டா மூர்த்திநீ - பௌதிக
ஆன்மீக ஆதாரா ! அத்தாட்சி ஆனவனே
வான்மேக மாயூரா வா.
2. கணங்கள் முதல்வா கணேசா தலைவா
இனந்கொள்ளும் சாத்திரங்கள் ஏற்பாய் - மணங்கொள்ளும்
பெம்மான் தனிக்கதையைப் பேசிடவே எண்ணமுற்றேன்
எம்மான் எனக்கருள்செய் இன்று .
3. அம்மாஎம் சாரதே! அன்பின் திருவுருவே
இம்மைக்குக் காரணியே எம்வாக்கின் - மெய்ம்மைக்குத்
தெய்வம்நீ தேவி ஒலிக்கும் பதத்தலைவி
உண்மைக் குயிரூட்ட வா .
4. சொல்லேர் உழவர்க்குச் சோர்வில் அருள்செய்யும்
நல்லதோர் நாட்டின் நனிகலமே - எல்லையில்
சக்தி யுடையவளே சத்ய சகதம்பா
சக்தி ! அருளிடுவாய் சான்று!
5. பூரணனே மூத்தோர் பிரம்மம் எனப்போற்றும்
காரணனே குன்றாம் குணங்கொண்டாய் - நாரணனே
பண்டரீயா! பாண்டுரங்கா! பாகாய் கருணைபெய்
வண்டலவன் வாழ்வுரைக்குங் கால்.
6. உலகெங்கும் நீநிறைந்தாய் உன்னுருவம் உண்மை
பல நூலும் ஆராய்ந்து பார்க்கும் - புலனாகா
வண்ணம் எதையும் வசப்படுத்தி ஆட்டிவைப்பாய்
அண்ணல் புகழ்பாடல் ஆக்கு.
..
7. ஏட்டுப் படிப்பால் எவரும் உனைக்காணார்
போட்டியாய் வாதம் பிரதிவாதம் - காட்டவொண்ணா
சக்ரபாணி சான்றோர்க்கே காட்சியாம் மற்றவர்க்கு
வக்ரம் ! வணக்கம் உனக்கு !
8. ஐந்து முகத்தோனே ! ஐயாவே ! சங்கரரே !
மைந்து மனிதமண்டை மாலையே - ஏந்தும்
கரைகண்டா ! நாமம் கடைத்தேற்றும் : துன்பம்
இறைபோற்றும் அன்பருக்கேது ?
9. உந்தன் கழல்பணிந்து உன்னுதவி தான்பெற்றே
இந்தத் துதியைநான் ஏத்தலுற்றேன் - சிந்தை
பசுபதிஓம் ரூபா திகம்பரா தாராய்
பசுமையாய் பாபாவின் பா.
10. அத்திரியின் புத்திரர் ஆன்றோராம் தத்தரையும்
பத்தினியாம் லட்சுமியின் பார்த்தாவாம் - விட்னுவையும்
துக்காராம் போலத் தெளிந்த மகான்களையும்
பக்தரெல்லாம் போற்றிடுவேன் பார்.
11. சாயீசா வெற்றி சுகம்பெருக! சார்ந்திட்ட
பாவிகளைக் காக்கின்ற பாங்கினிலே - மேவியுந்தன்
பாதம் சிரமே பதிக்கின்றேன் பத்திரமாய்
பார்த்துப் பயம் நீக்குவாய்.
12. நீயே பரப்பிரம்மம் ! நீயேதான் நாரணும்
நீயே சுகங்களின் நற்பீடம் - நீயே
மனிதரில் சீருடையோன் மன்மதனைத் தீய்த்த
புனிதஉமை பாகத்தன் நீ .
13. மனித உருவெடுத்த மாதேவன் பாபா
புனிதத் திருவானத்(து) ஏகன் - இனித்த
கருணைக் கடல்தான் : பிறவிப் பிணிக்கு
மருந்தாம் : மகான்களில் வான் .
14. ஏழைக்குச் சிந்தாமணி, கங்கை பக்தர்க்கே:
ஊழாம் கடல் ஆழ்வோர்க்(கு) ஓடமாம் - பாழாக்கும்
அச்சம் தனைநீக்கும் ஆலயமே ! சுத்தத்தின்
உச்சம்: உலகுன் களிப்பு .
15. பிறப்பிறப்பற்றீ ரெனப் பேராய்வில் தேர்ந்தோம்
பிறப்பிறப்பில் பற்றற்றீர் பெம்மான் - பிறப்பிறப்பு
அஞ்ஞானம் தோற்றுவிக்கும் ஆதலால் மாதவ
எஞ்ஞானம் நின்தாள் சரண்.
16. ஓடைநீர் வந்ததெவண் ? உள்ளதுவே வந்ததாம்
ஓடையாம் நீர்வரவால் ஒர்படுகை - கோடையிலே
நீர்வற்றும் கூடும் நிரம்பிவிடும் யாதானும்
பார்படுகை நீர்பார்ப்ப தன்று.
17. படுகை பெருமையாம் நீர்வரத்தால் வற்ற
கெடுகை யுரும்வருந்தும் கீழாம் - இடுகையாம்
நீரூற்று சைதன்யம் , நின்றவுடன் நீர்ப்படுகை
பூவேற்கும் பூமகனே பேசு.
18. பிறப்பில் அருட்கடலுன் ஆயுதம் எந்தன்
பொறுப்பில்லா அஞ்ஞானம் போக்கி - அறுக்க
விழைகின்றேன் பெம்மானே வேட்பாமித் தோற்றம்
மழையெனமுக் காலமு மாம்.
.. தொடரும்
.
No comments:
Post a Comment