' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

ஒரு நிமிடம் : ஒரு குறள்

Thursday, January 3, 2013

ஸ்ரீ சாயிநாத தவன மஞ்சரி

ஸ்ரீ தாச்கணு  மகராஜ்  படைத்த ஸ்ரீ சாயிநாத தவன மஞ்சரி 
(தமிழில் வெண்பாமாலை by திரு ராமானுஜகள்ள பிரான் (TRK) அவர்கள்)

1. கௌரியின் மைந்தன் கணேசனே போற்றினேன் 
    மௌன மனமெட்டா  மூர்த்திநீ - பௌதிக 
    ஆன்மீக ஆதாரா ! அத்தாட்சி ஆனவனே 
    வான்மேக மாயூரா வா.
                                                                                         
2.   கணங்கள் முதல்வா கணேசா தலைவா 
      இனந்கொள்ளும் சாத்திரங்கள் ஏற்பாய் - மணங்கொள்ளும் 
      பெம்மான் தனிக்கதையைப் பேசிடவே எண்ணமுற்றேன் 
      எம்மான் எனக்கருள்செய் இன்று .

3.   அம்மாஎம் சாரதே! அன்பின் திருவுருவே 
      இம்மைக்குக் காரணியே எம்வாக்கின் - மெய்ம்மைக்குத் 
      தெய்வம்நீ தேவி ஒலிக்கும் பதத்தலைவி 
      உண்மைக் குயிரூட்ட வா .

4.  சொல்லேர் உழவர்க்குச் சோர்வில் அருள்செய்யும் 
     நல்லதோர் நாட்டின் நனிகலமே - எல்லையில் 
     சக்தி யுடையவளே சத்ய சகதம்பா 
     சக்தி !  அருளிடுவாய் சான்று!

5.   பூரணனே மூத்தோர் பிரம்மம் எனப்போற்றும் 
      காரணனே குன்றாம் குணங்கொண்டாய்  - நாரணனே 
      பண்டரீயா!  பாண்டுரங்கா! பாகாய் கருணைபெய் 
      வண்டலவன் வாழ்வுரைக்குங் கால்.

6.   உலகெங்கும் நீநிறைந்தாய் உன்னுருவம் உண்மை 
      பல நூலும் ஆராய்ந்து பார்க்கும் - புலனாகா 
      வண்ணம் எதையும் வசப்படுத்தி ஆட்டிவைப்பாய் 
      அண்ணல் புகழ்பாடல் ஆக்கு.
                                                                         ..
7.   ஏட்டுப் படிப்பால் எவரும் உனைக்காணார்   
      போட்டியாய் வாதம் பிரதிவாதம் - காட்டவொண்ணா 
      சக்ரபாணி சான்றோர்க்கே காட்சியாம் மற்றவர்க்கு 
      வக்ரம் ! வணக்கம் உனக்கு !

8.   ஐந்து முகத்தோனே ! ஐயாவே ! சங்கரரே !
      மைந்து மனிதமண்டை மாலையே - ஏந்தும் 
      கரைகண்டா ! நாமம் கடைத்தேற்றும் : துன்பம்    
      இறைபோற்றும் அன்பருக்கேது ?

9.   உந்தன் கழல்பணிந்து  உன்னுதவி தான்பெற்றே 
      இந்தத் துதியைநான் ஏத்தலுற்றேன் - சிந்தை 
      பசுபதிஓம் ரூபா திகம்பரா தாராய் 
      பசுமையாய் பாபாவின் பா.

10. அத்திரியின் புத்திரர் ஆன்றோராம் தத்தரையும்
       பத்தினியாம் லட்சுமியின் பார்த்தாவாம் - விட்னுவையும் 
      துக்காராம் போலத் தெளிந்த மகான்களையும் 
      பக்தரெல்லாம் போற்றிடுவேன் பார்.

11.  சாயீசா வெற்றி சுகம்பெருக! சார்ந்திட்ட 
       பாவிகளைக் காக்கின்ற பாங்கினிலே - மேவியுந்தன் 
       பாதம் சிரமே பதிக்கின்றேன் பத்திரமாய் 
       பார்த்துப் பயம் நீக்குவாய்.

12.  நீயே பரப்பிரம்மம் ! நீயேதான் நாரணும் 
       நீயே சுகங்களின் நற்பீடம் - நீயே 
       மனிதரில் சீருடையோன் மன்மதனைத் தீய்த்த 
       புனிதஉமை  பாகத்தன் நீ .

13.  மனித உருவெடுத்த மாதேவன் பாபா 
       புனிதத் திருவானத்(து)  ஏகன் - இனித்த 
       கருணைக் கடல்தான் : பிறவிப் பிணிக்கு 
       மருந்தாம் : மகான்களில் வான் .

14.  ஏழைக்குச் சிந்தாமணி, கங்கை பக்தர்க்கே:
       ஊழாம் கடல் ஆழ்வோர்க்(கு) ஓடமாம் - பாழாக்கும்
       அச்சம் தனைநீக்கும் ஆலயமே ! சுத்தத்தின் 
       உச்சம்: உலகுன் களிப்பு .

15.  பிறப்பிறப்பற்றீ  ரெனப் பேராய்வில்  தேர்ந்தோம்
       பிறப்பிறப்பில் பற்றற்றீர்  பெம்மான் - பிறப்பிறப்பு 
       அஞ்ஞானம்  தோற்றுவிக்கும் ஆதலால் மாதவ
       எஞ்ஞானம்  நின்தாள் சரண்.

16.  ஓடைநீர் வந்ததெவண் ? உள்ளதுவே வந்ததாம் 
       ஓடையாம் நீர்வரவால்  ஒர்படுகை - கோடையிலே 
       நீர்வற்றும்  கூடும் நிரம்பிவிடும் யாதானும் 
       பார்படுகை நீர்பார்ப்ப தன்று.

 17. படுகை பெருமையாம் நீர்வரத்தால் வற்ற 
       கெடுகை யுரும்வருந்தும் கீழாம் - இடுகையாம் 
       நீரூற்று சைதன்யம் , நின்றவுடன் நீர்ப்படுகை 
       பூவேற்கும் பூமகனே பேசு.

18. பிறப்பில் அருட்கடலுன் ஆயுதம் எந்தன் 
      பொறுப்பில்லா அஞ்ஞானம் போக்கி - அறுக்க 
      விழைகின்றேன் பெம்மானே வேட்பாமித் தோற்றம் 
      மழையெனமுக் காலமு மாம்.  
                                                                                            ..  தொடரும்
                 .

 
  

     

   

No comments:

Post a Comment