' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

ஒரு நிமிடம் : ஒரு குறள்

Tuesday, November 29, 2011

OPS Digital Office at US

Ops family mail.opsfamily@gmail.com has invited you to join the opsfamily
group with this message:

Vanakkam,

Please accept and join this group so that you'll automatically be updated
with the OPS Communication and other discussion happening withing the OPS
Community.

If you have any questions, feel free to contact any one of the following.

1. Karthik - Cell: 732.692.4016
2. Sudarshan - Cell: 732.309.5853








Here is the group's description:

This is a group to connect the families belonging to the OPS community

---------------------- Google Groups Information ----------------------

You can accept this invitation by clicking the following URL:

http://groups.google.com/group/opsfamily/sub?s=pBVpDBQAAABPQvu6-73hiycQ73HP70dhBAMt63rLoCxr-bvccETqww&hl=en


--------------------- If This Message Is Unwanted ---------------------

If you feel that this message is abuse, please inform the Google Groups staff
by using the URL below.

http://groups.google.com/groups/abuse?invite=YgAAAPm1sw1lAAAAz2nfHn4AAAAAAEbxk8BXa6HqIAWHsy49AwR0Zu8&hl=en

Anbudan,
OPS Digital Office

கவிதை

  அம்மா
  அம்மா 
 
உன்னை பாட நான் வார்த்தை எங்கு தேடுவேன்,,,,,,,,,,
 
நான் பேசும் வார்த்தைக்கு இலக்கணம் நீயம்மா,,,,,,,,,,

 உன் தியாகங்களை நான் வெல்ல முடியுமா,,,,,,,
 
இவ்வுலகில் என்னை தோன்ற வைத்தாயே,,,,,,,
 
நீ கடவுளின் உருவமம்மா ,,,,,,,,,,,
 
உன் அன்பை விட பெரியது இவ்வுலகில் வேறு எதுவும் இல்லை,,,,,,,,,
 
உன்னைவிட எனக்கு வேறு எதுவும் பெரிதல்ல,,,,,,
 
அம்மா என்றும் எனக்கு நீயே வேண்டும்,,,,,,,,,,,
 
எத்தனை கோடி  ஜென்மம் வந்தாலும்,,,,,,
 
உன் வயிற்றில் நான் உதிக்க வேண்டும்,,,,,,,,,,

அம்மா உன்னிடத்தில் நன்றி சொல்ல எனக்கு
வார்த்தை இல்லை,,,,,,,
 
உன் உயிர் ஜீவன் நானம்மா ,,,,,,,,,
 
என்றும் என் பிறவி பலன் உன் சொல்படியே ஆகட்டும் அம்மா,,,,,,,,
 -----------------------------------------------------------------------------------------------------------------------
கவிதை ஆக்கம் ..
K.வைஷ்ணவி கார்த்திகேயன்
(Daughter in law  of  GANESAN SARASWATHI ) MADURAI.

Saturday, November 26, 2011

நமது வலைதளத்தில் நமது உறவினர்கள் யாரேனும் விலாசம் மற்றும் தொலைபேசி/கைபேசி எண்கள் மாற்றினால் அதனையும் வெளியிட்டால் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பது எனது தாழ்மையான கருத்தாகும்.

Regards
M.R.S.

M.Ramasubramanian, Coimbatore

Wednesday, November 23, 2011

வணக்கம் ,

எனது பாட்டி திருமதி.கோமதி தெய்வநாயகம்,கோவில்பட்டி . வரைந்த கோலம் - கார்த்தி சங்கர்,

மகளிர்க்கான திறமைகள்

வணக்கம் ,

எனது அத்தை திருமதி.மங்கை லோகநாதன் ,கோவில்பட்டி. தீட்டிய கோலம்...., - கார்த்திக் சங்கர். 


வடகரை தெய்வத்திரு தெய்வநாயகம்பிள்ளை, ஸ்ரீவைகுண்டம் தெய்வத்திரு எதிராஜ் பிள்ளை ஆகியோரின் பேத்தியும் , கோவில்பட்டி ஜோதிநகர் திரு சங்கர் அவர்களின் புதல்வி திருவளர் செல்வி 

S.கீதா  
செமப்புதூர் தெய்வத்திரு கந்தசாமி பிள்ளை, கோவில்பட்டி தெய்வத்திரு பாலசுப்ரமணிய பிள்ளை ஆகியோரின் பேரனும் கோவில்பட்டி S.K.முருகன் பிள்ளை அவர்கள் மகன் திருவளர் செல்வன் 
M.சம்பத் குமார்  
இவர்களது திருமண வைபவம் கோவில்பட்டி அங்காள பரமேஸ்வரி  திருமண மண்டபத்தில் வைத்து 07.11.2011  அன்று சிறப்பாக நடைபெற்றது.

திருமணம்  நிகழ்வுகள் போது எடுக்கப்பட்ட சில படங்கள்,  கலந்து கொள்ள முடியாதவர்களின்  பார்வைக்காக இத் தளத்தில்  தொகுக்கப் பட்டுள்ளன.  
By
Karthikeyan

Sunday, November 20, 2011

நவம்பர் மாதக் கூட்டம்

கோவில்பட்டி சங்க நவம்பர் மாதக் கூட்டம் 09.11.2011 அன்று கோவில்பட்டி சங்க நிர்வாக கமிட்டி உறுப்பினர் திரு ஞானதேசிகன் (ரவி) அவர்கள் மகன் திரு மாணிக்கவாசகம் திருமண வரவேற்பு நிகழ்ச்சியன்று கோவில்பட்டி செல்வ மகாலில் வைத்து தலைவர் திரு தேவர்பிரான் அவர்கள் தலைமையில் ,பொருளாளர் திரு ரெங்க நாதன் அவர்கள் இறைவணக்கத்துடன் துவங்கியது. 

 மணமக்களை வாழ்த்தி சங்கம் சார்பாக வாழ்த்து மடலும், நினைவு பரிசும் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் புது டில்லி திரு ராஜ்குமார் (விட்டல்) அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு , கோவில்பட்டி சங்க செயல்பாடுகள் பற்றியும் , இணைய தள உபயோகம் பற்றியும் பாராட்டி பேசினார்கள். மேலும் இணைய தளத்தில் வழங்கும் வேலை வாய்ப்பு மற்றும் கல்வி (Foreign opportunities with Scholarship )செய்திகளை இளைஞர்கள் பயன்படுத்தி நாம் முன்னேற வேண்டும் என வலியுறுத்தினார்கள்.

சங்க செயல்கள் பற்றி விவாதிக்கையில் மாணவ மாணவியர்க்கு ஊக்குவிக்கும்படி கட்டுரை, ஓவிய போட்டிகள் ஏற்படுத்த வேண்டும் என கருத்து தெரிவித்து செல்வன் கார்த்தி சங்கர் மற்றும் பொறியாளர் செல்வி சண்முகப்ரியா ஆகியோர் பேசினார்கள்.

சிறப்பு விருந்தினர் திரு ராஜ்குமார் (விட்டல்) அவர்களுக்கு சங்கத்தின் சார்பாக திரு நெல்லையப்பன் அவர்களால் பொன்னாடை போற்றி கவுரவிக்கப்பட்டது.

இம்மாத  அதிர்ஷ்டசாலி செல்வி சண்முகப்ரியா.

திரு செண்பகசுந்தரம் அவர்கள் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது. 


ஓ ப சீ மாதர் சங்க செய்திகள்

ஓ ப சீ வேளாளர் கல்வி அபிவிருத்தி சங்கம், திருநெல்வேலி - 6 

 ஓ ப சீ மாதர் சங்கம் : திருநெல்வேலி 

                               12.11.2011 அன்று ஓ ப சீ மாதர் சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம், திருநெல்வேலி ,மகாராஜா நகர் ,உயர்நீதி மன்ற வழக்கறிஞர் திரு ஆ. சங்கரசுப்ரமணியன் அவர்கள் இல்லத்தில் திருமதி , திருமதி லலிதா சங்கரசுப்ரமணியன் அவர்கள் தலைமையில் இறைவணக்கத்துடன் ஆரம்பித்து , கூட்டுப் பிரார்த்தனையுடன் திருமதி லலிதா சங்கரசுப்ரமணியன் அவர்கள் அர்ச்சிக்க , உறுப்பினர்கள் வழிபாடு பாட நடந்தது. மாதர் சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு மாதாந்திர சீட்டு மற்றும் மாதாந்திர குலுக்கல் நடைபெற்று மாதர் சங்கத்திற்கு வழக்கம் போல் நன்கொடை அளித்தனர்.
                                               சமீபத்தில் நடைபெற்ற சதாபிஷேக விழா தம்பதியர் திரு ஆ.சங்கரசுப்ரமணியன் மற்றும் திருமதி லலிதா சங்கரசுப்ரமணியன் ஆகியோரிடம் கலந்து கொண்ட மாதர்கள் தங்கள்தம் குடும்பத்துடன் வணங்கி ஆசி பெற்றனர். விழா தம்பதியர் ஆசி வழங்கி பரிசுகளும் வழங்கினர். 
                                            சங்கத்தலைவி திருமதி கோதை சங்கரன் அவர்கள், திருமதி & திரு ஆ. சங்கரசுப்ரமணியன் அவர்களுக்கும் , கூட்டத்திற்கு வந்திருந்த உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி கூறினார். 
                                               அடுத்த மாதாந்திரக் கூட்டம் தலைவி திருமதி கோதை சங்கரன் அவர்கள் இல்லத்தில் 10.12.2011 அன்று நடத்த தீர்மானிக்கலாயிற்று. 

செய்தி அளித்தவர் திருநெல்வேலி திரு செந்தூர் நாதன், 
செயலாளர் ,  
ஓ ப சீ வேளாளர் கல்வி அபிவிருத்தி சங்கம், திருநெல்வேலி அவர்கள்.

பரோட்டா பிரியர்களே உஷார்!

செய்தி அளித்தவர் திரு செந்தூர் நாதன் அவர்கள். அவர்களுக்கு நன்றி. 


நம்மவர்களின் பழக்கவழக்கங்களின் படி உடல் நலம் தரும் காலத்திற்கேற்ற உணவு வகைகளையும், தயாரிக்கும் முறையையும் தெரிவித்தால் அனைவரும் பயன்பெறுவர் (முக்கியமாக இத்தலைமுறையினருக்கு).  எவரேனும் முன்வருவாரா?

Monday, November 14, 2011

திருமண விழா

ஆலங்கிணறு தெய்வத்திரு நா. மாணிக்க வாசகம் பிள்ளை, தெய்வத்திரு மா பட்சியம்மாள் , மதுரை தாசில்தார் தெய்வத்திரு சி.எஸ் . சொக்கலிங்கம்  பிள்ளை - சொ. ராஜம்மாள் ஆகியோரின் பேரனும்,  கோவில்பட்டி  திரு. மா. ஞானதேசிகன், (ரவி),  திருமதி  ஞா. மரகதம் தம்பதியரின்  சிரேஷ்ட புதல்வன்

                             திருவளர் செல்வன்  ஞா. மாணிக்கவாசகம்    B E

கோவை தெய்வதிரு சொ. சுப்ரமணியபிள்ளை, தெய்வத்திரு லோகாம்பாள் அம்மாள், சிங்கை தெய்வத்திரு நெ. கல்யாண சுந்தரம் பிள்ளை, தெய்வத்திரு க கமலாம்பாள் ஆகியோரின் பேத்தியும், சென்னை சு முத்தையா திருமதி மு வள்ளிமயில் தம்பதியரின் புதல்வி

                திருநிறைச்செல்வி மு. கமலகல்யாணி (எ) மாலினி  B E     


இவர்களது திருமணம் சென்னை,  கிழக்கு தாம்பரம், மீனாட்சி கல்யாண மண்டபத்தில் 07 . 11 . 2011   அன்று சிறப்பாக நடை பெற்றது.

திருமண வரவேற்பு கோவில்பட்டியில் செல்வம் கல்யாண மகாலில் 09.11.2011 அன்று சிறப்பாக நடைபெற்றது.
                              
  நிகழ்ச்சியில் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

                          திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்வுகள் போது எடுக்கப்பட்ட சில படங்கள்,  கலந்து கொள்ள முடியாதவர்களின்  பார்வைக்காக இத் தளத்தில்  தொகுக்கப் பட்டுள்ளன. 

புது டில்லியிலிருந்து திரு ராஜ்குமார் அவர்கள் இச்செய்தி மற்றும் படங்களைத் தொகுத்து அளித்துள்ளார்கள்.

திருமண விழா

கோவை, கவுண்டம்பாளையம் தெய்வத்திரு அருணாச்சலம் பிள்ளை - திருமதி எ.பத்மாவதி மற்றும் செல்வமருதூர் தெய்வத்திரு கே.விஸ்வநாத பிள்ளை - திருமதி வி.சண்முகாம்பாள் ஆகியோரது பேத்தியும் கருர் திரு.அ.ராஜா - திருமதி வி.அலமேலுமங்கை அவர்களின் புதல்வி செல்வி ரா.பத்மப்ரியா M.S.(Bits, Pilani) க்கும் சிதம்பரம் தெய்வத்திரு வெங்கடாசலம் பிள்ளை - தெய்வத்திரு சேவல்கொடி மற்றும் சீர்காழி தெய்வத்திரு சுப்பிரமணிய பிள்ளை - தெய்வத்திரு அலமேலு ஆகியோரது பேரனும், திரு வி.சரவணன் - திருமதி எஸ்.திலகவதி அவர்களின் குமாரன் எஸ். கார்த்திகேயன் பி.ஈ. க்கும் 31.10.2011 அன்று கோவை, மருதமலை அடிவாரம், பொதிகை மஹாலில்   திருமணமும், வரவேற்பு நிகழ்ச்சி  05.11.2011 அன்று சிதம்பரம், வடத்தெரு, ராயல் மஹாலிலும் சிறப்பாக நடைபெற்றது.

கோவையிலிருந்து திரு M.R.S.
அவர்கள் 

Sunday, November 13, 2011

திருநெல்வேலி OPS வெள்ளாளர் கல்வி அபிவிருத்தி சங்க ஆண்டறிக்கை


திருநெல்வேலி திரு செந்தூர் நாதன் அவர்கள் இந்த ஆண்டறிக்கையை அனுப்பியுள்ளார்கள்.  இந்த ஆண்டறிக்கை PDF File format -ல் உள்ளது . மேலும் password மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளதால் விருப்பம் உள்ளவர்கள் e -mail  மூலம் opsvellalar@gmail.com  -  ஐ தொடர்பு கொள்ளவும். 
Download Link:  http://www.sendspace.com/file/zgrw2k

Saturday, November 12, 2011

திருமண விழா

வடகரை தெய்வத்திரு தெய்வநாயகம்பிள்ளை, ஸ்ரீவைகுண்டம் தெய்வத்திரு எதிராஜ் பிள்ளை ஆகியோரின் பேத்தியும் , கோவில்பட்டி ஜோதிநகர் திரு சங்கர் அவர்களின் புதல்வி திருவளர் செல்வி 
S.கீதா  
செமப்புதூர் தெய்வத்திரு கந்தசாமி பிள்ளை, கோவில்பட்டி தெய்வத்திரு பாலசுப்ரமணிய பிள்ளை ஆகியோரின் பேரனும் கோவில்பட்டி S.K.முருகன் பிள்ளை அவர்கள் மகன் திருவளர் செல்வன் 
M.சம்பத் குமார்  
இவர்களது திருமண வைபவம் கோவில்பட்டி அங்காள பரமேஸ்வரி  திருமண மண்டபத்தில் வைத்து 07.11.2011  அன்று சிறப்பாக நடைபெற்றது.

 நிகழ்ச்சியில்  உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கோவை சங்க செய்தி


கோவை N.சண்முகசுந்தரத்தின் புதல்வன் விகாஸ் நாராயணன் மருத்துவ செலவுக்கு அமெரிக்கா டாக்டர் திரு மகிழ் மாறன் சகோதரி டாக்டர் சந்தோஷ் குமாரி செய்தி மலர் ஆசிரியர் திரு அனந்த கண்ணபிரான் அவர்கள் மூலம் கோவை சங்க செயலருக்கு 500 டாலர் (ரூ 24119) அனுப்பியுள்ளார்கள்.

அதை 06.11.11 அன்று கோவை சங்க கூட்டத்தில் சண்முகசுந்தரம் அவர்களிடம் கொடுக்கப்பட்டது. 

டாக்டர் சந்தோஷ் குமாரி அவர்களுக்கும் திரு அனந்த கண்ணபிரான் அவர்களுக்கும் கோவை சங்கத் தலைவர் , செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் நன்றி தெரிவித்தார்கள். 

இதுவரை மருத்துவ செலவுக்காக சங்கம் மூலமாக ரூ 66169/- கொடுக்கப்பட்டுள்ளது.

செல்வன் விகாஸ் நாராயணன் நன்கு குணமடைந்து வருகிறார். விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறோம்.

P.கல்யாணசுந்தரம்                                                           M.R.திருவடி 
தலைவர்                                                                                செயலர் 

தகவல் தெரிவிப்பவர் கோவையிலிருந்து M.R.திருவடி அவர்கள்.  
 

மகளிர்க்கான திறமைகள் :

வணக்கம் ,

எனது சித்தி கோவில்பட்டி ,திருமதி.கிருஷ்ணமாள் வீரசுந்தரம் 
 
 
 
வரைந்த ரங்கோலி கோலம் ,
 
 
 
 
இதில் ஆறு படங்கள் மறைமுகமாக இருப்பதாக கூறியுள்ளார்  கண்டு பிடியுங்கள் ....

கார்த்திக் சங்கர் ,கோவில்பட்டி ,

Friday, November 11, 2011

மகளிர்க்கான திறமைகள் :

வணக்கம்,

மகளிர்க்கான திறமைகள் :
 
இதில் முதலாவதாக எனது பெரியம்மா, மதுரை திருமதி.முத்து அருணாசலம் அவர்களின் ரங்கோலி கோலம் இடம்பெற விழைகிறேன்.இது போன்று உங்களது திறமைகளையும் வெளிப்படுத்த வேண்டுகிறேன். 

கார்த்தி சங்கர் , கோவில்பட்டி 
 இந்தக் கோலம் பற்றி திருமதி முத்து அருணாசலம் அலைபேசி வழியாக கூறும் பொழுது,  தான் இக்கோலத்தினை உப்பும் சிறு வண்ணத் தூள்களையும் கலந்து வரைந்ததாகக் குறிப்பிட்டார். அவரிடமிருந்து இன்னும் பல கலை நயம் மிக்க கோலங்களை எதிர்பார்க்கிறோம்.
வாழ்த்துக்கள்.

Wednesday, November 9, 2011

இதைத்தான் எதிர்பார்த்தோம்..

இன்று (09.11.2011) திரு கார்த்தி சங்கர் அவர்கள் ஒரு விழாவில் சந்தித்த பொழுது, நமது உறுப்பினர்கள் தங்களது படைப்புகளை (கவிதை, கட்டுரை, வரைபடங்கள் , PHOTOS , ETC.,) இந்த BLOG-ல் வெளியிடலாமா? என கேட்டார். 

இந்த  வெப் சைட்  ஆரம்பத்ததின் நோக்கமே நமது உறுப்பினர்கள் அனைவருக்கும் எந்த பாகுபாடின்றி , எல்லா INFORMATION ம், உடனுக்கு உடன் சென்று அடைய வேண்டும் என்பதும், மற்றும் நம் OPS குடும்பத்தினரின் திறமைகளை வெளிகொணர்ந்து அதனை மேம்படுத்த வேண்டும் என்பதுதான். கட்டுரைப் போட்டி இத் தளத்தில் நடத்தப்பட்டதின் நோக்கமும் அதுதான்.

எனவே முன்னரே கேட்டுக்கொண்டதுபோல் யார் வேண்டுமானாலும் அவர்களது படைப்புகளை எந்த மொழியிலும் இந்த இணைய தள E-MAIL ID க்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். அவை இத் தளத்தில் வெளியிடப்படும். அனுப்புவதில் சந்தேகம், சிரமம் இருப்பின் எனக்கு MOBILE மூலம் தெரியப்படுத்தவும். 

நமது இணையத்தளத்தினை மேம்படுத்த யோசனைகளையும் வரவேற்கிறேன்.  ஏற்கனவே புது டில்லியிலிருந்து மரியாதைக்குரிய திரு ராஜ்குமார் அவர்கள் நமக்கு வேலை வாய்ப்பு மற்றும் கல்வி செய்திகளை எளிய முறையில் தொகுத்து வழங்கி வருகிறார்கள். அவர்கள் தரும் செய்திகள் அனைத்தும் அரிதாகும். அதனை நாம் அனைவரும் சரியான நேரத்தில் , சரியான முறையில் உபயோகித்து பயனடைய வேண்டுகிறேன்.

நம் தளத்தில் தற்போது E-MAIL ALERT SYSTEM அறிமுகப்படுத்தபட்டுள்ளது . (இதில் பதிவு செய்பவர்களுக்கு, ஏதேனும் புதிய செய்திகள் இத்தளத்தில் இடம்பெற்றால் உடனே அதன் சாராம்சம் அவர்களுக்கு EMAIL மூலம் அனுப்பப்படும்).  அதே போல் SMS ALERT சிஸ்டம்-ம் விரைவில் இடம் பெற இருக்கிறது. இது போல் ஏதேனும் IDEAS இருந்தால் அதனை வரவேற்கிறேன்.
நன்றி.

நெல்லையப்பன், கோவில்பட்டி


Monday, November 7, 2011

B.R.பாடகலிங்கம் - கோதை தம்பதியினரின் 50 வது திருமண விழா

பிரம்மதேசம் திரு B.R.பாடகலிங்கம் - கோதை தம்பதியினரின் 50  வது  திருமண விழாவை 02.11.2011 அன்று உடுமலைபேட்டை ஜீவா நகர் விநாயகர் கோவிலில் வைத்து சிறப்பாக கொண்டாடினார்கள். அதுசமயம் 100 முதியோர்களுக்கு அன்னதானம் செய்தார்கள். விழாவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
விழ ஏற்பாடுகளை  P.R.S.மணி-காந்தி, P.ராமனுஜம் - ரமா, லெட்சுமி - கணபதி  @ குகன் , ராஜேஸ்வரி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தார்கள்.
கோவில்பட்டி OPS சங்கம் விழா தம்பதியினரை வாழ்த்துகிறது.

Sunday, November 6, 2011

போஸ்டல் திரு G.கள்ளபிரான் - கோமதி தம்பதியினரின் 50 வது திருமண விழா

திருநெல்வேலி போஸ்டல் திரு G.கள்ளபிரான் - கோமதி தம்பதியினரின் 50 வது திருமண விழாவினை  02.11.2011 புதன் அன்று திருச்சியில் வைத்து சிறப்பாக கொண்டாடினார்கள். 
ஸ்ரீ ரங்கம், திருவானைக்கோவில் , சமயபுரம், குணசீலம் கோவில்களுக்கு சிற்றுந்து ஏற்பாடு செய்து சென்று தரிசித்து வந்தார்கள்.
விழா ஏற்பாடுகளை புதல்வர்கள் திரு சங்கரசுப்ரமணியன்-கோமதி , ஞானதேசிகன் - லலிதா, திருவேங்கடராமனுஜம் - தெய்வநாயகி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தார்கள். நெருங்கிய உறவினர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
விழா தம்பதியினரை சங்கம் வாழ்த்துகிறது.