' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

ஒரு நிமிடம் : ஒரு குறள்

Monday, August 15, 2011

பொதுக்குழுக் கூட்டம்

கோவில்பட்டி சங்க பொதுக்குழுக் கூட்டம் 14.08.2011 அன்று  கோவில்பட்டி சைவ வேளாளர் சங்க திருமண மண்டபத்தில் வைத்து தலைவர் திரு தேவர்பிரான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

சைவ வேளாளர் சங்க தலைவர் திரு நடராஜபிள்ளை அவர்கள் முன்னிலை வகித்தார்கள் . 

செல்வி முனீஸ் சங்கரி இறைவணக்கத்துடன் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டு செயலாளர் திரு தெய்வநாயகம் அவர்கள் வரவேற்புரையுடன் தொடர்ந்தது. 

பொருளாளர் திரு ரெங்கநாதன் அவர்கள் வரவு செலவு கணக்கு சமர்ப்பித்தார்கள். 

 L K G முதல் 5 வது வரை படிக்கும் மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டியினை திரு செண்பகசுந்தரம் அவர்களும் , 6  முதல் 8 வது வரை படிக்கும் மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டியினை திருமதி லெட்சுமி அவர்களும் நடத்தினார்கள் .

 திருமதி மங்கை லோகநாதன் அவர்கள்  6 முதல் 8 வது வரை படிக்கும் மாணவர்களுக்கு பொது அறிவு வினா விடை போட்டியினை நடத்தினார்கள்.

 திருமதி சூடி நெல்லையப்பன்  அவர்கள்  9 முதல் +2 வது வரை படிக்கும் மாணவர்களுக்கு பொது அறிவு வினா விடை போட்டியினை நடத்தினார்கள்.

 போட்டியில வென்ற மாணவர்களுக்கும் , கலந்து கொண்ட மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பெற்றது.

  +2 ல்  முதலிடம் பெற்ற மாணவர் செல்வன் செண்பகசுந்தரம், 10 ம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவி செல்வி சாரதா , இரண்டாம் இடம் பெற்ற மாணவி செல்வி முனீஸ்சங்கரி, 3 ம் இடம் பெற்ற மாணவி செல்வி லெட்சுமி ஆகியோருக்கு ரெங்கநாயகி ராமானுஜம் அறக்கட்டளையின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.

  D.A.P. Trust லிருந்து 33 மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட தொகையினை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கைப்பட வழங்கப்பட்டது.

     கூட்டம் நடத்த அனுமதி வழங்கிய சைவ வேளாளர் சங்கத் தலைவர்  திரு நடராஜபிள்ளை அவர்களுக்கும் மற்றும் உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

    திரு கிருஷ்ணகுமார் அவர்கள் நன்றி தெரிவிக்க கூட்டம் இனிதே நிறைவுற்றது. 











No comments:

Post a Comment