கோவையிலிருந்து திரு கல்யாண சுந்தரம் அவர்கள் அளிக்கும் செய்தி...
கோவை OPS கூட்டம் 07.08.2011 அன்று காலை 10.30 மணிக்கு திரு வீரகுமார் அவர்கள் இல்லத்தில் வைத்து பொது நல சேம நிதி மற்றும் சங்க கூட்டம்
தலைவர் திரு கல்யாண சுந்தரம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சுமார் 60 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
திரு ஈஸ்வரன் அவர்கள் இறைவணக்கம் பாடினார்கள்.
சென்ற மாத அறிக்கையினை திரு M R திருவடி அவர்கள் சமர்பித்தார்கள்.
தலைவர் வேண்டுகோளுக்கினங்க கல்வி டிரஸ்ட் விபரங்களையும் தெரிவித்தார்கள்.
DAP Trust மூலம் நம் மாணவர்களுக்கு Rs 21700/- வழங்கப்பட்டது.
பொதுநல சேம நிதி மூலம் Rs 14700/- வழங்கப்பட்டது.
பத்தாம் வகுப்பு மற்றும் +2 ல் அதிக மதிப்பெண் பெற்ற நம் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
DAP Trust மற்றும விகாஸ் நாராயணனுக்கு மருத்துவ உதவிக்கு உறுதுணை நின்ற செய்தி மலர் ஆசிரியர் திரு அனந்த கண்ணபிரான் அவர்களுக்கும் மற்றும் உதவி செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
திரு வெங்கட்ராமன் அவர்கள் நன்றி தெரிவிக்க கூட்டம் இனிதே நிறைவுற்றது .
அடுத்த கூட்டம் பல்லடம் திரு ஸ்ரீதரன் அவர்கள் இல்லத்தில் வைத்து நடைபெறும். தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
.......கோவையிலிருந்து திரு கல்யாண சுந்தரம் அவர்கள்