' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

ஒரு நிமிடம் : ஒரு குறள்

Tuesday, August 16, 2011

கோவை சங்க பொது குழு கூட்டம்

கோவையிலிருந்து திரு கல்யாண சுந்தரம் அவர்கள் அளிக்கும் செய்தி...

  கோவை OPS கூட்டம் 07.08.2011 அன்று காலை 10.30 மணிக்கு திரு வீரகுமார் அவர்கள் இல்லத்தில் வைத்து பொது நல சேம நிதி மற்றும்  சங்க கூட்டம்
 தலைவர் திரு கல்யாண சுந்தரம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சுமார் 60 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 திரு ஈஸ்வரன் அவர்கள் இறைவணக்கம் பாடினார்கள். 

 சென்ற மாத அறிக்கையினை திரு M R திருவடி அவர்கள் சமர்பித்தார்கள்.
 தலைவர் வேண்டுகோளுக்கினங்க கல்வி டிரஸ்ட் விபரங்களையும் தெரிவித்தார்கள்.

DAP Trust மூலம் நம் மாணவர்களுக்கு Rs 21700/- வழங்கப்பட்டது. 
பொதுநல சேம நிதி மூலம் Rs 14700/- வழங்கப்பட்டது.
பத்தாம் வகுப்பு மற்றும் +2 ல் அதிக மதிப்பெண் பெற்ற நம் மாணவர்களுக்கு பரிசு  வழங்கப்பட்டது. 

 DAP Trust மற்றும விகாஸ் நாராயணனுக்கு மருத்துவ உதவிக்கு உறுதுணை நின்ற செய்தி மலர் ஆசிரியர் திரு அனந்த கண்ணபிரான் அவர்களுக்கும் மற்றும் உதவி செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. 

 திரு வெங்கட்ராமன் அவர்கள் நன்றி தெரிவிக்க கூட்டம் இனிதே நிறைவுற்றது .

 அடுத்த கூட்டம் பல்லடம் திரு ஸ்ரீதரன் அவர்கள் இல்லத்தில் வைத்து நடைபெறும். தேதி பின்னர் அறிவிக்கப்படும். 

 .......கோவையிலிருந்து திரு கல்யாண சுந்தரம் அவர்கள்

Monday, August 15, 2011

பொதுக்குழுக் கூட்டம்

கோவில்பட்டி சங்க பொதுக்குழுக் கூட்டம் 14.08.2011 அன்று  கோவில்பட்டி சைவ வேளாளர் சங்க திருமண மண்டபத்தில் வைத்து தலைவர் திரு தேவர்பிரான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

சைவ வேளாளர் சங்க தலைவர் திரு நடராஜபிள்ளை அவர்கள் முன்னிலை வகித்தார்கள் . 

செல்வி முனீஸ் சங்கரி இறைவணக்கத்துடன் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டு செயலாளர் திரு தெய்வநாயகம் அவர்கள் வரவேற்புரையுடன் தொடர்ந்தது. 

பொருளாளர் திரு ரெங்கநாதன் அவர்கள் வரவு செலவு கணக்கு சமர்ப்பித்தார்கள். 

 L K G முதல் 5 வது வரை படிக்கும் மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டியினை திரு செண்பகசுந்தரம் அவர்களும் , 6  முதல் 8 வது வரை படிக்கும் மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டியினை திருமதி லெட்சுமி அவர்களும் நடத்தினார்கள் .

 திருமதி மங்கை லோகநாதன் அவர்கள்  6 முதல் 8 வது வரை படிக்கும் மாணவர்களுக்கு பொது அறிவு வினா விடை போட்டியினை நடத்தினார்கள்.

 திருமதி சூடி நெல்லையப்பன்  அவர்கள்  9 முதல் +2 வது வரை படிக்கும் மாணவர்களுக்கு பொது அறிவு வினா விடை போட்டியினை நடத்தினார்கள்.

 போட்டியில வென்ற மாணவர்களுக்கும் , கலந்து கொண்ட மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பெற்றது.

  +2 ல்  முதலிடம் பெற்ற மாணவர் செல்வன் செண்பகசுந்தரம், 10 ம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவி செல்வி சாரதா , இரண்டாம் இடம் பெற்ற மாணவி செல்வி முனீஸ்சங்கரி, 3 ம் இடம் பெற்ற மாணவி செல்வி லெட்சுமி ஆகியோருக்கு ரெங்கநாயகி ராமானுஜம் அறக்கட்டளையின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.

  D.A.P. Trust லிருந்து 33 மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட தொகையினை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கைப்பட வழங்கப்பட்டது.

     கூட்டம் நடத்த அனுமதி வழங்கிய சைவ வேளாளர் சங்கத் தலைவர்  திரு நடராஜபிள்ளை அவர்களுக்கும் மற்றும் உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

    திரு கிருஷ்ணகுமார் அவர்கள் நன்றி தெரிவிக்க கூட்டம் இனிதே நிறைவுற்றது. 











Thursday, August 11, 2011

பதவி உயர்வு

 கோவை சங்க தலைவர் திரு கல்யாணசுந்தரம் அவர்கள் புதல்வியும் திரு பாலகிருஷ்ணன் மனைவியுமாகிய திருமதி முத்துகுமாரி அவர்கள் கோவை நீதி துறையில் எழுத்தராக(Assistant) பதவி உயர்வு பெற்றுள்ளார்கள். அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

கோவை சங்க பொது குழு கூட்டம்

     கோவை பொது நல சேம நிதி & OPS  சங்க பொதுக் குழுக்கூட்டம் 17.07.2011 அன்று வடவள்ளி திரு மீனாட்சி சுந்தரம் அவர்கள் இல்லத்தில் வைத்து நடைபெற்றது.    
    திரு மீனாட்சி சுந்தரம் அவர்கள் பேத்தி செல்வி பூஜா இறைவணக்கம் பாடினார். செல்வன் விகாஸ் நாராயணன் மருத்துவக் உதவிக்காக எடுத்துக்கொண்ட முயற்சிக்காக திரு M .R திருவடி அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 
திரு ஈஸ்வரன் அவர்கள் வேண்டுகோளின்படி Xth மற்றும் +2 ல் முதல் மூன்று இடம் பிடிப்பவர்களுக்கு பரிசு வழங்குவதென்று தீர்மானம் நிறைவேற்றப்பெற்றது.
பத்தாம் வகுப்பு முதல் மூன்று இடங்கள்.
1 .  பொள்ளாச்சி      திரு சற்குருநாதன் பேத்தி திரு சக்தி அருணாசலத்தின் புதல்வி முதல் இடம்.
2 . உடுமலை திரு பாடகலிங்கம்பிள்ளை மற்றும் தலைவர் திரு கல்யாணசுந்தரம் இவர்களின் பேரன் திரு ராமானுஜம் அவர்களின் புதல்வன் செல்வன் பவித்திரன் இரண்டாம் இடம்.
3 . தெய்வத்திரு நடராஜபிள்ளை பேத்தி திரு வீரகுமார் அவர்களின் புதல்வி செல்வி வீரலட்சுமி மூன்றாவது இடம்.
+2 முதல் மூன்று இடங்கள்.
1 .    தெய்வத்திரு கோவிந்தம்பிள்ளை அவர்களின் பேத்தி திரு பச்சிராஜன் அவர்கள் புதல்வி செல்வி பச்சியம்மாள் முதல் இடம்.
மேற்கண்ட மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதக்கூட்டத்தில் பரிசுகள் வழங்கப்படும்.

 செய்தி மலர் சங்க செய்திகளை வெளியிட்டு பற்பல உதவிகளுக்கு துணை நிற்பதையும் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  திரு கணபதி அவர்கள் புதல்வன் செல்வன் மணிபாரதி சதுரங்கப் போட்டியில் மாநில அளவில் முதல் இடம் பெற்றமைக்கு சங்கத்தின் சார்பாக ரூபாய் 251 வழங்கப்பட்டது. 
    பதவி உயர்வு பெற்று திருச்சியில் பணியாற்றும் தெய்வத்திரு வேலாயுதம் பிள்ளை அவர்கள் புதல்வன் செல்வன் கள்ளபிரான் அவர்களுக்கு பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
     உதவி தலைவர்   திரு ஈஸ்வரன் அவர்கள் தான் சென்று வந்த ஆன்மீக சுற்றுலா பற்றி எடுத்துக் கூறினார்கள் . மேலும் ஒரு பக்திப் பாடல் பாடி எல்லோரையும் மகிழ்வித்தார்கள். 
பொருளாளர்  திரு ஆழ்வார் அப்பன்  அவர்கள் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது. 
 செய்தியளிப்பவர் கோவை தலைவர் திரு கல்யாணசுந்தரம் அவர்கள்.