' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

ஒரு நிமிடம் : ஒரு குறள்

Thursday, December 20, 2012

திரு.ஜெகதீசன் பிள்ளை - கோடரங்குளம் தெய்வத்திரு இராமலிங்கம் பிள்ளை ஆகியோரது பேத்தியும், கோவை திரு ஜெ.அருணாசலம் - திருமதி லதா அருணாசலம் ஆகியோரது மகள்கள் செல்வி அ. பிரபாலட்சுமி, அ. ஜெயந்தி இருவரும் கோவை இராமநாதபுரம் ஸ்ரீசத்ய சாயி சேவா சமிதி சார்பில் ஸ்ரீசாய் பாபா பிறந்தநாள் விழாவில் நடனமாடி பரிசுகள் பெற்றார்கள் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

எம்.ஆர்,திருவடி

பொது செயலாளர்
ஒ.ப.சீ. சங்கம், கோவை

Monday, December 10, 2012

கோவை ஓ.ப.சீ. வெள்ளாளர் சங்கம்

பொது நல சேமநிதி மற்றும் ஓ.ப.சீ. வெள்ளாளர் சங்கம், கோவை

291வது பொது நல சேமநிதி மற்றும் ஓ.ப.சீ. வெள்ளாளர் சங்க கூட்டம் 02/12/2012 ஞாயிறு காலை 11 மணிக்கு தலைவர் பா.கல்யாணசுந்தரம் இல்லத்தில் நடைபெற்றது.

இறை வணக்கம் செல்வன் சுபாஷ், செல்வி பூஜா, செல்வி அமிர்தா மற்றும் உதவி தலைவர் திரு எஸ்.ஈஸ்வரன் அவர்களால் பாடப்பட்டது.

மறைந்த நம் உறவினர்களுக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டது,

தலைவர் பா.கல்யாணசுந்தரம் அவர்கள், வந்திருந்த உறுப்பினர்களை வர்வேற்றும், செயலாளரிடம் அவரது வீட்டில் வைத்து, தனது தந்தை தெய்வத்திரு பிள்ளைபெருமாள் பிள்ளை அவர்களின் பெயரில் அவரது மகன் திரு.பி.பாபநாசம் அவர்கள் கோவை சங்கத்தின் கல்வி நிதிக்காக ருபாய் பத்தாயிரம் கொடுத்ததிற்கும்,
மேனாள் பொருளாளர் தெய்வத்திரு சங்கரமூர்த்தியா பிள்ளையின் வேண்டுகோளுக்கு இணங்க, தங்கள் முன்னோரின் நினைவாக கல்வி டிரஸ்டு ஆரம்பிக்க பிள்ளையார் சுழி போட்ட திரு லிபியா இராமானுஜம் அவர்களுக்கும், வைப்புத் தொகை வைத்துள்ளவர்களுக்கும் தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார். மேலும் இவ்வைப்பு தொகையானது ரூபாய் இரண்டு லடசத்து ஐம்பதாயிரம் அளவிற்கு வளர்ந்த்தை கண்டு தாம் மிக்க மகிழ்ச்சியடைவதாக கூறினார்.

சென்ற மாத அறிக்கை மற்றும் வரவு-செலவு கணக்கு விபரங்கள் செயலாளரால் கூட்டத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டது, அறிக்கையும், வரவு-செலவு கணக்கு விபரங்கள் உறுப்பினர்களால் ஏகமனதாக கரகோஷத்துடன் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள்:

1. நம்மவர்களின் குழ்ந்தைகளுக்கு கல்வி உதவி தொகை அளித்தல்

2. மருத்துவ உதவி நாடி வருபவர்களுக்கு ரூபாய் ஆயிரமும், மேலும் தேவைப்பட்டால் உறவினர்களிடம் வசூல் செய்து அளிப்பது

3. நன்மை, தின்மைகளுக்கு ரூபாய் ஆயிரம் அளித்தல்

4. முன்னால் உதவி.தலைவர் தெய்வத்திரு பிள்ளைபெருமாள் பிள்ளை அவர்கள் பெயரில் கல்வி டிரஸ்டு ஏற்படுத்தி அதற்கு ரூபாய் பத்தாயிரம் அளித்த திரு.பாபநாசம் என்ற பாபுவிற்கு நன்றி தெரிவித்தல்

5. தெய்வத்திரு வேலாயுதம் பெயரில் கல்வி டிரஸ்டு ஏற்படுத்தி கொடுத்த திருமதி ஜெயந்தி வேலாயுதம் மற்றும் அவர்தம் மகன் திரு வே.கள்ளபிரானுக்கும் நன்றி தெரிவித்தல்

6. எக்காரணத்தை முன்னிட்டும் கடன் வழங்கபட மாட்டாது;

7. கோவை கல்வி டிரஸ்டின் பெயரில் ரூபாய் ஏழாயிரம் கணக்கு ஏற்படுத்துதல்

8. கோவை சங்க சேமிப்பு கணக்கில் குறைந்தது ரூபாய் பத்தாயிரம் இருத்தல் வேண்டும்

9. திருமதி மீனாட்சி சண்முகம் மற்றும் அவர்தம் கணவர் திரு பி.சண்முகம் அவர்களால் திரு.வி.அருணகிரி வாங்கியுள்ள கடனை திருப்பி செலுத்தியமைக்கு நன்றி தெரிவித்தல்

மேற்கண்ட தீர்மானங்களும் உறுப்பினர்களால் கரகோஷ்த்துடன் ஏகமனதாக ஏற்றுகொள்ளப்பட்டது.

வந்திருந்த உறுப்பினர்கள் பெயர்களை குலுக்கி போட்டதில் திரு உ.மீனாட்சிசுந்தரம், திரு.தோ. சாத்தூரப்பன் அவர்களுக்கும் தலா ஒரு டம்பளர் பரிசாக கொடுக்கப் பட்டது,

தனது மணி விழாவினை எஸ்.என்,அரங்கத்தில் கொண்டாடிய கோவை சங்கத்தின் உதவி தலைவர் திரு ச.ஈஸ்வரனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு அவருக்கு சங்கதின் சார்பில் பொன்னாடை போர்த்தப்பட்டது..

உதவி செயலாளர் திரு கோ. சங்கரலிங்கம் வந்திருந்த எல்லா உறுப்பினர்களுக்கும், இட உதவி மற்றும் அறுசுவை உணவினை வழங்கிய தலவர் பா.கல்யாணசுந்தரம், திருமதி கோமதி கல்யாணசுந்தரம் அவர்களுக்கும் நன்றி நவில, கூட்டம் இனிதே முடிந்தது.

P.Kalyanasundaram             

                                                   M,R.Thiruvadi
President, Kovai OPS                           
                                Gen. Secretary, Kovai OPS