' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

ஒரு நிமிடம் : ஒரு குறள்

Sunday, August 26, 2012

கோவை சங்க செய்திகள்

கோவை ஒ.பி.எஸ். சங்க செயலாளர் எம்.ஆர்.திருவடி அவர்கள் கோவை சங்கத்தின் சார்பாக கல்வி உதவித் தொகை கேட்டு வைத்த கோரிக்கைக்கு, சென்னை வாழ் இஞ்சினியர் திரு. சண்முகம் தான் நிறுவியுள்ள சண்முகம்-கீதா பப்ளிக் சாரிட்டபிள் டிரஸ்டு மூலமாக கீழ்கண்ட நான்கு மாணவ/மாணவியர்க்கு தலா ஐந்தாயிரம் வீதம் மொத்தம் ரூபாய் இருபதாயிரம் கல்வி உதவித் தொகையாக வழ்ங்கியுள்ளார்கள் என்பதனை தெரிவித்துக் கொள்ளுகிறோம். கல்வி உதவித் தொகை அளித்த திரு சண்முகத்திற்கு சங்கத்தின் சார்பில் நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம். கல்வி உதவித் தொகை பெற்றவர்கள் பின்வருமாறு:

1) கு.ஸ்ரீராம் த/பெ தெய்வத்திரு ஜி.குமாரசாமி --  பி.காம் (சி.ஏ.)

2) ப.மீனாட்சிசுந்தரம் த/பெ ஜி.பட்சிராஜன்        --  டி.எம்.ஈ (சாண்டுவிச்)
3) ப.பட்சியம்மாள் த/பெ ஜி.பட்சிராஜன்             --  பி,காம்
4) அ.ராகவேந்திரகுமார் த/பெ கே.அப்பாசாமி   --  எம்.சி.ஏ.

அன்புடன்,

எம்.ஆர்.திருவடி
செயலாளர்
ஒ.பி.எஸ்., கோவை

Wednesday, August 8, 2012

Information:
Indian Banks’ Association (IBA) had revised the Educational Loan Scheme
recently, (Circular No: CE/210 dated 31.05.2012) in consultation with major
educational Institutions in India- The Details  can be seen at http://www.iba.org.in/
educational_loan.asp
By Shri Rajkumar,Mumbai
OPS வெள்ளாளர் சங்கம்,  கோவில்பட்டி 
பொதுக்குழு கூட்ட அழைப்பு 

நமது சங்க பொதுக்குழுக் கூட்டம் 12.08.2012 ஞாயிறு அன்று மாலை 5.00 மணிக்கு கோவில்பட்டி சைவ வேளாளர் சங்க கட்டிடத்தில் வைத்து நடைபெற உள்ளது. உறுப்பினர்கள் தவறாது குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டுகிறோம். 

M.தெய்வநாயகம்    C.ரெங்கநாதன்                   D.தேவர்பிரான் 
    செயலாளர்             பொருளாளர்                               தலைவர் 
O.P.S வெள்ளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு, சென்னை 
(Federation of OPS Vellalar Sangams)

கூட்டமைப்பின்  பொதுக்குழுக் கூட்டம் 15.08.2012 புதன் அன்று காலை 11 மணிக்கு , வி .கே புரம் , AVR கல்யாண மண்டபத்தில் நடைபெறும் என கூட்டமைப்பு தலைவர் திரு அழகிய நம்பி அவர்களும், செயலாளர் திரு ஞானதேசிகன் அவர்களும் தெரியபடுத்தி உள்ளார்கள் 

பொது நல சேமநிதி மற்றும் ஒ.பி.எஸ். வெள்ளாளர் சங்கம், கோயம்புத்தூர்



22/07/2012 ஞாயிறு காலை 10.30 மணிக்கு ஹோட்டல் ஆர்.எச்.ஆர்.ல் பொதுக்குழு கூட்டம் நடைப்பெற்றது. இறை வணக்கம் திரு எம்.சுப்பிரமணியன் மகள் பூஜா, மகன் சுபாஷ் இருவரும் பாடினார்கள். மேலும் உப தலைவர் திரு எஸ்.ஈஸ்வரன் அவர்கள் பக்தி பாடல் பாடி எல்லோரையும் பரவசப்படுத்தினார்.


தெய்வத்திரு கணபதி சுப்பிரமணியன் மூத்த மகன் ஜி.குமாரசாமி அவர்களின் மறைவிற்கு இரண்டு நிமிடம் மெளனம் அனுஷ்டிக்கப்பட்டது.


திரு.எஸ்.எஸ்.மணி அவர்கள் வந்திருந்த உறுப்பினர்களை வரவேற்பு உரை நிகழ்த்தினார்.


தலைவர் திரு பா.கல்யாணசுந்தரம் அவர்கள் தனது உரையில், கல்வி நன்கொடையாக ரூபாய் பதினைந்தாயிரம் திரு எஸ்.ஈஸ்வரன், திரு டி.சாத்துரப்பன் மற்றும் திரு எம்.ஆர்.திருவடி அவர்களால் உறுப்பினர்களிடமிருந்து பெற்றமைக்கு நன்றி தெரிவித்தார். மேலும் அதற்காக கார் வாடகை, பெட்ரோல், டிரைவர் பேட்டா செலவழித்த திரு.எஸ்.ஈஸ்வரன் மற்றும் திரு.டி.சாத்துரப்பன் அவர்களுக்கும் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.


மேலும் கூட்டத்தில் திரு.எம்.ஆர்.திருவடி அவர்கள் நெல்லை கல்வி அபிவிருத்தி சங்கத்திற்கு ஆயுள் சந்தாவும், ஒ.பி.எஸ்.கூட்டமைப்பிற்கு சந்தா மற்றும் செய்தி மலர் சந்தா வசூலித்து அனுப்பியமைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.


நம் இன மாணவ்/மாணவியர்களுக்கு கல்வி உதவி தொகை நல்கிய டி.ஏ.பி. டிரஸ்டிற்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் தெய்வத்திரு சங்கரமூர்த்தி-தெய்வத்திருமதி கோதை அம்மாள் அவர்களின் பேரனும், திரு ச.சுப்பிரமணியன்-திருமதி சு.அழகம்மாள் அவர்களின் மகன் திரு சு.சங்கர் அவர்கள் தமிழக ஆளுநர் திரு ரோசையா அவர்களிடமிருந்து டாக்டர் (பி.எச்டி) பட்டம் பெற்றமைக்கு கூட்டத்தில் பாராட்டும், வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.


சென்ற மாத அறிக்கை உதவி செயலாளர் திரு.ஜி.சங்கரலிங்கம் அவர்களாலும், வரவு செலவு அறிக்கை பொது செயலாளர் திரு எம்.ஆர்.திருவடி அவர்களாலும் வாசிக்கப்பட்டு, அனைத்தும் உறுப்பினர்களால் கரகோஷத்துடன் ஏற்றுக்கொள்ளப் பட்டது.


ஈஷா யோக மையத்தில் வசிக்கும் நம் உறவினர் திரு.சொ.ச. சுவாமி அவர்கள் தனது உரையில், தனது தந்தையார் காலத்திலிருந்து மிகச் சிறப்பாக நடைபெறுவதாகவும், இதன் உப தலைவராக இருந்தமையையும் நினைவு கூர்ந்தார். மேலும் ஒற்றுமையுடனும், அன்புடனும் உறுப்பினர்கள் இருப்பதால்தான் நாம் முன்னுக்கு வர முடிந்துள்ளதையும், இரு சங்கங்களும் நல்ல முறையில் செயல்படுதையும் குறிப்பிட்டு அதனை கண்டு தான் பூரிப்பும், மகிழ்ச்சியும் அடைவதாக குறிப்பிட்டார். மேலும் இக்கூட்டத்தில் பேச வாய்ப்பளித்தமைக்கு நிர்வாகிகளுக்கு தனது நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொண்டார்.


கோவை சங்க கெளரவ ஆலோசகர் திரு எஸ்.வெங்கட்ராமன் சங்கமானது கட்டுக்கோப்புடனும், அமைதியாகவும் நடைப்பெறுவதை பாராட்டி பேசினார்.


திரு திரவியம் ராஜப்பா அவர்களின் மருமகன் திரு.ஆர்.சுப்பிரமணியன் அவர்கள் தனது உரையில், மற்ற சங்கங்களைப் போல் இன உணர்வோடு முடிநத வரையில் நிதி உதவி வழங்க வேண்டும் என்றும், சங்கம் தங்களுக்கு என்ன செய்தது என்று பார்ப்பதை விட நாம் சங்கத்திற்கு எப்படி உதவிட முடியும் என்று எண்ணிப் பார்க்க வேண்டும் என்றும், அப்ப்டி செய்தால் நம் இன மக்கள் எல்லோரும் வளர்ச்சி காண இயலும் என்று கூறினார். மேலும் அவர் தனது உஅரையில், கல்வி உதவி தொகை பெறுபவர்கள் தாங்கள் நல்ல நிலைக்கு வந்தப்பின் அவ்வாறே தாங்களும் தங்களால் இயன்ற கல்வி உதவி தொகை சங்கத்திற்கு அளித்து தங்களது ஆதரவினை தொடர வேண்டும் என்று வலியுறுத்தினார்.


கோவை சங்க கல்வி குழு தலைவர் பேராசிரியர் திரு இ.வள்ளிநாயகம் தனது உரையில், நம் உறவின மாணவர்கள் எவரேனும் தங்களது ஏழ்மை காரணமாக கற்க இயலாமல் போவதை தடுக்கும் பொருட்டு அவர்களுக்கு கல்லூரி படிப்பு செலவுகளை நம் உறவினர்கள் முடிந்தவரை ஏற்று கொண்டால் மிக நன்றாக இருக்கும் என்பதை வலியுறுத்தி பேசினார்.


நம் இன மாணவ/மாணவியர்களுக்கு டி.ஏ.பி. டிரஸ்டு அளித்த கல்வித் தொகையான ரூபாய் இருபத்தைந்தாயிரத்து நானுற்று ஐம்பது (25,450), பொது நல சேம ந்தி அளித்த ரூபாய் பதினைந்தாயிரத்து என்னூறு (15,800) ஆக மொத்தம் ரூபாய் நாற்பத்து ஒன்றாயிரத்து இருநூற்று ஐம்பது (41,250) இக்கூட்டத்தின் வாயிலாக வழங்கப்பட்டது.


பத்தாம் வகுப்பில் முதல் மாணவியாக வந்த திரு.ஏ.சீனிவாசனின் புதல்வி செல்வி சீ.லட்சுமி நவீனாற்கு ரூபாய் முன்னூறும் (300), இரண்டாவதாக வந்த திரு ஜி.சொக்கலிங்கத்தின் மகன் சொ.ராம்குமாருக்கு ரூபாய் இருநூற்று ஐம்பது (250) மற்றும் மூன்றாவதாக வந்த திரு எம்.சுப்பிரமணியன் புதல்வன் எஸ்.எம்.எஸ். சுபாஷ்க்கு ருபாய் இருநூறும் (200) கல்வி ஊக்க தொகையாக வழங்கப்பட்டது.


+2 வகுப்பில் முதல் மாணவனாக வந்த தெய்வத்திரு ஜி.குமாரசாமியின் புதல்வன் கு.ராம்குமார் அவர்களுக்கு ருபாய் முந்நூறு (300) கல்வி ஊக்க தொகை வழங்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற 25 வயதிற்கு கீழ்பட்டவர்களுக்கான சதுரங்கப் போட்டியில் முதல் பரிசினை பெற்ற திரு.எஸ்.கணபதி@ குகனின் புதல்வர் க.மணிபாரதிக்கு சங்கத்தின் சார்பில் ஒரு சிறு பரிசு அளிக்கப்பட்டது.


மேலும் கோவை சங்கத்தில் திரு.வே.கள்ளபிரான் அவர்கள் தனது தந்தை நினைவாக தெய்வத்திரு க.வேலாயுதம் அவர்களின் பெயரில் கல்வி அறக்கட்டளையாக ரூபாய் ஐந்தாயிரம் (5,000) அளித்தார். அதனை சங்க உறுப்பினர்கள் தங்களது மகிழ்ச்சினை கரகோஷ்த்தின் மூலம் வெளிப்படுத்தினர்.


உறுப்பினரின் ஈமச்சடங்கிற்கு ரூபாய் ஆயிரம் (1,000) அளித்ததை சங்க உறுப்பினர்கள் ஏகமனதாக ஏற்று கொண்டார்கள்.


கூட்டத்திற்கு வந்திருநத மாணவ/மாணவியர்களில் குலுக்கல் மூலம் தேர்ந்து எடுக்கப்பட்ட, எஸ்.எஸ்.சுபாஷ், எஸ்.மணிபாரதி மற்றும் ஸ்ரீரங்கனாதன் ஆகிய மூவருக்கும் பொது அறிவு புத்தகம் தலைவர் திரு பா.கல்யாணசுந்தரம் தனது சார்பில் வழங்கினார்.


கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் பெயர்களை குலுக்கிப் போட்டதில் தேர்வு செய்யப்பட்ட திரு. உ.மீனாட்சிசுந்தரம் மற்றும் திரு எம்.சொக்கலிங்கம் ஆகிய இருவருக்கும் சங்கத்தின் சார்பாக எவர்சிலர் டிபன் பாக்ஸ் பரிசாக அளிக்கப்பட்டது.


இறுதியாக, உதவி செயலாளர் திரு ஜி.சங்கரலிங்கம் தனது உரையின்போது, கல்வி உதவி தொகை அளித்திட்ட டி.ஏ.பி, டிரஸ்டிற்கும், கல்வி உதவி நல்கிய நம் இன பெருமக்களுக்கும், கலந்து கொண்ட உறவினர்களுக்கும், இடம் மற்றும் மதிய உணவு வழங்கிய திருமதி ஸ்ரீரங்கநாயகி அம்மாள், திரு எஸ்.எஸ்.மணி, திருமதி ஆணந்த கிருஷ்ணவேணி மணி, செல்வன் ஸ்ரீரங்கந்தாதன் மற்றும் செல்வி மகாலட்சுமிக்கும் நன்றி தெரிவித்தார்.

Regards
M.R.Thiruvadi
Gen Sec. Kovai OPS Sangam
==============================
==============================
==============================
======================================
Informed by
M.R.S.,Kovai