' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

' ஒரு நிமிடம் : ஒரு குறள் '

ஒரு நிமிடம் : ஒரு குறள்

Thursday, March 8, 2012

பணி நிறைவு பாராட்டு விழா

 கோவில்பட்டி O.P.S. சங்க கவுரவ ஆலோசகர் திரு கனகசபாபதி அவர்கள் நில அளவை துறையில் சார் ஆய்வாளராக பணியாற்றி 29.02.2012 அன்று ஒய்வு பெற்றார்கள்.
அவர்களைப் பாராட்டி   கோவில்பட்டி O.P.S. சங்கத்தின் சார்பாக 03.03.2012 அன்று மாலை 6 மணி அளவில் திரு கனகசபாபதி இல்லத்தில் வைத்து சங்க தலைவர் திரு தேவர்பிரான் அவர்கள் தலைமையில் பாராட்டு கூட்டம் நடைபெற்றது.
அவர்கள் பணியினை பாராட்டி ஒய்வு பெற்ற தாசில்தார் திரு L.கிருஷ்ணன், ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் திரு லட்சுமண பிள்ளை ,  துணை தாசில்தார் திரு குருநாதன் , திரு செண்பகசுந்தரம், திரு வீரசுந்தரம், திரு சிவசுப்ரமணியன், பொருளாளர் திரு ரெங்கநாதன், உதவி பொருளாளர் திருமதி மீனாட்சி பாலகுமார் , திருமதி மீனா தேவர்பிரான் , செல்வன் பிரமநாயகம், திருமதி காந்திமதி, திருமதி மல்லிகா அருணாசலம், மாரியப்பன் (P.G.B) மற்றும் திருமதி சூடி நெல்லையப்பன் ஆகியோர் பேசினார்கள். 
திரு கனகசபாபதி  அவர்கள் பாராட்டு உரையாற்றியவர்களுக்கும் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு சுவையான விருந்தும் அளித்து சிறப்பித்தார்கள். 
இப்பாராட்டு விழாவினில் நமது சங்க உறுப்பினர்கள் 50 நபர்கள் கலந்து சிறப்பித்தது குறிப்படத்தக்கது. சங்கத்தின் சார்பாக திரு கனகசபாபதி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கப்பட்டது. 
விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் செல்வி பார்வதி நன்றி கூற பாராட்டு விழா இனிதே நிறைவுற்றது. 

பெயர் சூட்டு விழா

கோவில்பட்டி O.P.S. வெள்ளாளர் சங்க செயலாளர் திரு M.தெய்வநாயகம் - திருமதி செல்லம்மாள் ஆகியோரின் புதல்வி திருமதி கிருஷ்ணவேணிக்கும் , திருநெல்வேலி திரு ராமகிருஷ்ணன் திருமதி ஸ்ரீவரமங்கை ஆகியோரின் புதல்வன் திரு சின்னத்தம்பிக்கும், ஆண் குழந்தை பிறந்து, 01.03.2012 அன்று வள்ளியூரில் நடைபெற்ற பெயர் சூட்டும் விழாவில் குழந்தைக்கு "ஜானகிராம்  என்ற நவீன்  " எனப் பெயர் சூட்டப்பட்டது. நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

Sunday, March 4, 2012

பதவி உயர்வு

நமது ஆலோசகரும் வழிகாட்டியுமாகிய  மும்பை திரு ராஜ்குமார் அவர்களின் புதல்வன் திரு R .K .அரவிந்த் அவர்கள் நேஷனல் ஹவுசிங் பேங்க் - ல் (National  Housing  Bank ,Mumbai ) இணை மேலாளர் பதவியிலிருந்து மேலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்கள். 
மேலும் திரு  திரு R .K .அரவிந்த் அவர்களின் துணைவியார் திருமதி அகிலா அரவிந்த் அவர்கள் தற்போது மும்பையில் 'Calypso ' என்ற பன்னாட்டு நிறுவனத்தில் உயர் அதிகாரியாக (Sr  Analyst ) பணியாற்றுகிறார்கள். 

அவர்களுக்கு வாழ்த்துக்கள்.